என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தமிழ்நாடு
பிரதமர் மோடி எல்லா வகையிலும் வளர்ச்சி திட்டங்களை கொண்டு வருகிறார்- தமிழிசை சவுந்தரராஜன்
- புதிய கல்வி கொள்கையில் பல நல்ல விஷயங்கள் இருக்கிறது.
- ஒவ்வொரு இடங்களில் கதிசக்தி என்ற திட்டத்தை பிரதமர் தொடங்கி வைத்திருக்கிறார்.
தூத்துக்குடி:
நாகர்கோவிலில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக தெலுங்கானா ஆளுநரும், புதுச்சேரி துணை நிலை ஆளுநருமான தமிழிசை சவுந்தரராஜன் இன்று காலை தூத்துக்குடி விமான நிலையம் வந்தார்.
விமான நிலைய வளாகத்தில் போலீசார் மரியாதையை ஏற்றுக் கொண்ட பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
தென் பகுதிக்கு வருவது மிக விருப்பமான ஒரு விஷயம். அதுவும் தூத்துக்குடிக்கு வருவது ரொம்ப விருப்பமான ஒரு விஷயம். தூத்துக்குடியில் வளர்ச்சி திட்டங்கள் கொண்டு வர வேண்டும் என்று மத்திய மந்திரி நிதின் கட்கரியிடம் பல நேரங்களில் கோரிக்கை வைத்திருக்கின்றோம்.
அதன் பேரில் தூத்துக்குடி வ.உ. சிதம்பரனார் துறைமுகம் சாலையில் ரூ. 200 கோடி மதிப்பில் 6 வழிச்சாலை, தேசிய நெடுஞ்சாலையை இணைக்கும் இத்திட்டம் தூத்துக்குடிக்கு பொருளாதாரத்தில் மிக பிரம்மாண்டமான ஒரு முன்னேற்றத்தை கொண்டு வரும்.
இதைப்போல இன்னும் பல முன்னேற்றங்கள் வர இருக்கிறது. அடிப்படை கட்டமைப்பை இந்தியாவில் உருவாக்க வேண்டும். வருங்கால சந்ததியினர் மிகவும் வசதியாக மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்று சொன்னதனால் ஒவ்வொரு இடங்களில் கதிசக்தி என்ற திட்டத்தை பிரதமர் தொடங்கி வைத்திருக்கிறார்.
அதில் 5, 6 துறையை சார்ந்தவர்கள் சாலை மேம்பாட்டு துறைமுகத்துறை சேர்ந்து நாட்டுக்கு மிக பிரம்மாண்டமான ஒரு திட்டத்தை கொண்டு வருகிறார்கள். அதனால் தான் புதுச்சேரியும் பல முன்னேற்றத்தை பெறுகிறது.
இப்போது காரைக்கால்-இலங்கை கப்பல் போக்குவரத்து வர இருக்கிறது. புதுச்சேரியில் இருந்து கோவை, சென்னைக்கு சிறுரக 20 பேர் இருக்கின்ற விமான போக்குவரத்து வர இருக்கிறது.
ஆக எல்லாவிதத்திலும் வளர்ச்சி திட்டங்களை பிரதமர் கொண்டு வந்து கொண்டிருக்கிறார். அதில் தூத்துக்குடி துறைமுகத்திற்கும் வாய்ப்பு கிடைத்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.
புதுச்சேரியில் ரூ. 1000 உரிமை் தொகையை குடும்ப பெண்களுக்கு முதல்-மந்திரி ரங்கசாமி அறிவித்து கொடுத்துக் கொண்டும் இருக்கிறார். தமிழகத்தில் செப்டம்பர் மாதம் தான் கொடுக்கிறோம் என்று சொல்லி இருக்கிறார்கள்.
புதிய கல்வி கொள்கையில் பல நல்ல விஷயங்கள் இருக்கிறது. ஆனால் அதை தமிழகம் போன்ற மாநிலங்கள் ஏற்றுக்கொள்ள மறுக்கிறார்கள். அதனால் நல்லவற்றை ஆராய்ந்து அதை அந்தந்த மாநிலங்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பது எனது கருத்து.
இவ்வாறு அவர் கூறினார்.
அப்போது தூத்துக்குடி தெற்கு மாவட்ட பா.ஜ.க. தலைவர் சித்ராங்கதன், தேசிய பொதுக்குழு உறுப்பினர் கனகராஜ், மாநில செயற்குழு உறுப்பினர் சந்தனகுமார், மாவட்ட பொதுச் செயலாளர்கள் உமரி சத்தியசீலன், ராஜா, துணைத் தலைவர் சிவராமன் மற்றும் முக்கிய நிர்வாகிகள் உடனிருந்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்