search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    திருவண்ணாமலையில் நாளை வடக்கு மண்டல வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டம்: மு.க.ஸ்டாலின் இன்று செல்கிறார்
    X

    திருவண்ணாமலையில் நாளை வடக்கு மண்டல வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டம்: மு.க.ஸ்டாலின் இன்று செல்கிறார்

    • முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திருவண்ணாமலையில் நடைபெறும் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார்.
    • திருவண்ணாமலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன் மேற்பார்வையில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    திருவண்ணாமலை:

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திருவண்ணாமலை மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக 2 நாட்கள் சுற்றுப்பயணமாக இன்று மாலை திருவண்ணாமலைக்கு வருகிறார்.

    அவருக்கு மாவட்ட எல்லையான கீழ்பென்னாத்தூர் ஒன்றியம் சோ.காட்டுக்குளம் பகுதியில் பொதுப்பணித்துறை அமைச்சரும், மாவட்ட செயலாளருமான எ.வ.வேலு தலைமையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட உள்ளது.

    இதனையடுத்து நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை 9 மணியளவில் திருவண்ணாமலை அருணை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் 600 படுக்கை வசதிகள் கொண்ட பல்நோக்கு மருத்துவமனை கட்டிடத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்து பார்வையிடுகின்றார்.

    தொடர்ந்து மாலை 4 மணியளவில் திருவண்ணாமலையை அடுத்த மலப்பாம்பாடி கிராமத்தில் தி.மு.க. சார்பில்

    வடக்கு மண்டல அளவிலான வாக்குசாவடி முகவர்கள் பயிற்சிப் பட்டறை கூட்டம் நடக்கிறது.

    கூட்டத்தில் திருவண்ணாமலை, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கிருஷ்ணகிரி, தர்மபுரி ஆகிய மாவட்டங்களை சேர்ந்த 13 ஆயிரம் வாக்குச்சாவடி முகவர்கள் பங்கேற்கின்றனர்.

    இதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறப்புரையாற்றுக்கின்றார்.

    அதன் பின்னர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், திருவண்ணாமலையில் நடைபெறும் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார்.

    முதலமைச்சரின் வருகையை முன்னிட்டு வடக்கு மண்டல ஐ.ஜி. கண்ணன் தலைமையில் வேலூர் சரக டி.ஐ.ஜி. முத்துசாமி, திருவண்ணாமலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன் மேற்பார்வையில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    Next Story
    ×