search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    நெல்லை வெள்ள சேதம்: அத்தியாவசிய தேவைகளுக்காக முதல்கட்ட நிதி வழங்கல்
    X

    நெல்லை வெள்ள சேதம்: அத்தியாவசிய தேவைகளுக்காக முதல்கட்ட நிதி வழங்கல்

    • தற்காலிக வீடு உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளுக்காக முதல்கட்ட நிதி வழங்கப்பட்டுள்ளது.
    • நெல்லை மாவட்டத்தில் 444 வீடுகள் மழை வெள்ளத்தால் சேதம் அடைந்துள்ளது.

    நெல்லை:

    கனமழை மற்றும் வெள்ளப்பெருக்கால் நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்கள் கடும் பாதிப்பை சந்தித்து உள்ளன. தாமிரபரணி ஆற்றில் இன்னும் வெள்ளம் கரை புரண்டு ஓடுகிறது. ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் குளங்கள் நிரம்பி உடைந்ததால் வெளியேறிய தண்ணீரால் தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் வெள்ளத்தில் தத்தளிக்கிறது. இன்னும் இந்த பாதிப்பில் இருந்து முழுவதும் மீள முடியவில்லை.

    நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ரேஷன் கடைகள் மூலமாக வெள்ள நிவாரணமாக தலா ரூ.6 ஆயிரம் வழங்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

    இந்நிலையில் நெல்லை மாவட்ட நிர்வாகம் வெளியிட்ட தகவலில்,

    * நெல்லை மாவட்டத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 212 வீடுகளுக்கு முதல்கட்ட நிதியாக 8.96 லட்ச ரூபாய் மாவட்ட பேரிடர் நிதியில் இருந்து வழங்கப்பட்டுள்ளது.

    * தற்காலிக வீடு உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளுக்காக முதல்கட்ட நிதி வழங்கப்பட்டுள்ளது.

    * நெல்லை மாவட்டத்தில் 444 வீடுகள் மழை வெள்ளத்தால் சேதம் அடைந்துள்ளது. கணக்கிடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

    * நெல்லை மாவட்டத்தில் மழை வெள்ளத்தால் இதுவரை 12 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 20,000 கோழிகள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×