என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தமிழ்நாடு
முதலமைச்சர் நாளை விழுப்புரம் பயணம்- 3 மாவட்ட விவசாய சங்க நிர்வாகிகளுடன் கலந்துரையாடல்
- முதலமைச்சர் வருகையையொட்டி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பல்வேறு முன்னேற்பாடு பணிகள் நடந்து வருகிறது.
- கள ஆய்வையொட்டி விழுப்புரம் மாவட்டம் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
விழுப்புரம்:
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை விழுப்புரம் வருகிறார்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நாளையும் (புதன்கிழமை), நாளை மறுநாளும் (வியாழக்கிழமை) விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி ஆகிய 3 மாவட்டங்களின் சட்டம்-ஒழுங்கு பாதுகாப்பு குறித்தும், வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்தும் அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொள்கிறார்.
இதற்காக அவர், நாளை சென்னையில் இருந்து காரில் புறப்பட்டு மதியம் 12 மணிக்கு விழுப்புரம் வருகிறார். விழுப்புரம் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள சுற்றுலா மாளிகைக்கு செல்லும் அவர் சிறிது நேரம் ஓய்வு எடுக்கிறார். பின்னர் மாலை 4.30 மணிக்கு கலெக்டர் அலுவலகத்தில் விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் ஆகிய 3 மாவட்ட விவசாயிகள் சங்க பிரதிநிதிகளுடன் கலந்துரையாடுகிறார்.
பின்னர் 3 மாவட்ட சிறு குறு தொழில் முனைவோருடன் கலந்துரையாடுகிறார். இரவு 7 மணிக்கு விழுப்புரம் சரக போலீஸ் டி.ஐ.ஜி. மற்றும் 3 மாவட்டங்களின் போலீஸ் சூப்பிரண்டுகள், துணை போலீஸ் சூப்பிரண்டுகள் ஆகியோருடன் சட்டம்-ஒழுங்கு நிலவரம் குறித்து ஆய்வு செய்து சட்டம்-ஒழுங்கு பாதுகாப்புக்காக மேற்கொள்ளவேண்டிய பணிகள் குறித்து பல்வேறு அறிவுரைகளையும், ஆலோசனைகளையும் வழங்குகிறார். பின்னர் சுற்றுலா மாளிகைக்கு சென்று தங்குகிறார்.
நாளை மறுநாள் (வியாழக்கிழமை) அதிகாலை 5.30 மணிக்கு நடைபயிற்சி மேற்கொள்கிறார். காலை 9.30 மணிக்கு விழுப்புரத்தில் கள ஆய்வு மேற்கொள்கிறார். 10 மணிக்கு 3 மாவட்ட அரசுத்துறை அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து ஆய்வுக்கூட்டம் நடத்தி திட்டப்பணிகளின் முன்னேற்றம் குறித்து கேட்டறிவதோடு பணிகளை விரைந்து முடித்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர தேவையான நடவடிக்கை எடுக்கும்படி அறிவுரைகளையும், ஆலோசனைகளையும் வழங்குகிறார்.
இதில் தலைமை செயலாளர் இறையன்பு, உள்துறை செயலாளர் பனீந்தர்ரெட்டி, டி.ஜி.பி. சைலேந்திரபாபு மற்றும் 60 ஐ.ஏ.எஸ்.அதிகாரிகள் கலந்து கொள்கிறார்கள்.
விழுப்புரத்திற்கு முதலமைச்சர் வருகையையொட்டி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பல்வேறு முன்னேற்பாடு பணிகள் நடந்து வருகிறது. கலெக்டர் அலுவலகம் உள்ளிட்ட அரசின் அனைத்துத்துறை அலுவலகங்களும் சுத்தம் செய்யப்பட்டு வர்ணம் தீட்டப்பட்டு புதுப்பொலிவுடன் காட்சியளிக்கிறது.
அதேபோல் பெருந்திட்ட வளாகத்தில் உள்ளசாலைகளும் புதிதாக போடப்பட்டு புதுப்பொலிவுடன் காட்சியளிக்கின்றன. பலத்த பாதுகாப்பு இந்நிலையில் முதவமைச்சரின் கள ஆய்வையொட்டி விழுப்புரம் மாவட்டம் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இப்பணியில் நூற்றுக்கணக்கான போலீசார் ஈடுபட்டுள்ளனர். இதனிடையே மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா உத்தரவின்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் முருகன் தலைமையிலான வெடிகுண்டு நிபுணர்கள் நேற்று மாலை மோப்பநாய் உதவியுடன் மாவட்ட கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகம் முழுவதும் தீவிரவெடிகுண்டு சோதனை நடத்தினர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்