search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    திராவிட மாடல் அரசால் உருவாக்கப்பட்ட மகத்தான திட்டம் தான் மக்களுடன் முதல்வர்: மு.க.ஸ்டாலின்
    X

    திராவிட மாடல் அரசால் உருவாக்கப்பட்ட மகத்தான திட்டம் தான் "மக்களுடன் முதல்வர்": மு.க.ஸ்டாலின்

    • மக்களுக்கு நம்பிக்கையை விதைக்கும் திட்டம் தான், "மக்களுடன் முதல்வர்"
    • 30 நாட்களில் 3.50 லட்சம் பயனாளிகளுக்கு அவர்களது மனுக்கள் மீது தீர்வு காணப்பட்டுள்ளது.

    சென்னை:

    சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்ற "மக்களுடன் முதல்வர்" திட்டத்தின் கீழ் 1598 பேருக்கு பணி நியமன ஆணைகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். தொடர்ந்து நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார்.

    இதையடுத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியதாவது:

    * திராவிட மாடல் அரசால் உருவாக்கப்பட்ட மகத்தான திட்டம் தான் "மக்களுடன் முதல்வர்"

    * ஆட்சியில் இல்லாதபோது மக்களுக்காக போராடுவோம், வாதாடுவோம்.

    * ஆட்சிக்கு வந்ததும் மக்களுக்கான நலத்திட்டங்களை தீட்டுவோம்.

    * "மக்களுடன் முதல்வர்" திட்டம் மூலம் அரசு சேவைகளை பெற அலைய தேவையில்லை என்ற நிலை உருவாக்கப்பட்டுள்ளது.

    * மக்களை தேடி அரசு இயந்திரம் செல்கிறது.

    * மக்களுக்கு நம்பிக்கையை விதைக்கும் திட்டம் தான், "மக்களுடன் முதல்வர்"

    * 30 நாட்களில் 3.50 லட்சம் பயனாளிகளுக்கு அவர்களது மனுக்கள் மீது தீர்வு காணப்பட்டுள்ளது.

    * இதுவரை 60 ஆயிரத்து 500 பணியிடங்கள் நிரப்பட்டுள்ளன.

    * தி.மு.க. ஆட்சியில் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அதிகரித்துள்ளது என்று கூறினார்.

    Next Story
    ×