search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    10-ம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்கியது
    X
    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

    10-ம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்கியது

    • தேர்வு அறைகளில் மாணவர்கள் ஒழுங்கீன செயல்களில் ஈடுபடுவதை தடுக்க, 48 ஆயிரத்து 700 ஆசிரியர்கள் தேர்வு அறை கண்காணிப்பாளர்களாக ஈடுபடுகிறார்கள்.
    • கடந்த 4-ந்தேதி தொடங்கிய பிளஸ்-1 பொதுத்தேர்வு நேற்றுடன் நிறைவடைந்தது.

    சென்னை:

    தமிழகத்தில் மாநில பாடத்திட்டத்தின் கீழ் பயிலும் 10-ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வுகள், இன்று (செவ்வாய்க்கிழமை) தொடங்குகிறது. இன்று தொடங்கும் தேர்வு, வருகிற ஏப்ரல் மாதம் 8-ந்தேதி வரை நடைபெற உள்ளன.

    முதல் நாளான இன்று, தமிழ் மற்றும் இதர மொழிப்பாட தேர்வுகள் நடக்கிறது. தேர்வை, 12 ஆயிரத்து 616 பள்ளிகளை சேர்ந்த, 4 லட்சத்து 57 ஆயிரத்து 525 மாணவர்கள், 4 லட்சத்து 52 ஆயிரத்து 498 மாணவிகள், ஒரு மூன்றாம் பாலினத்தவர் என மொத்தம் 9 லட்சத்து 10 ஆயிரத்து 24 பேர் எழுதுகிறார்கள். மேலும், 28 ஆயிரத்து 827 தனித்தேர்வர்கள், 235 சிறைவாசிகள் பொதுத்தேர்வை எழுதுகிறார்கள். தேர்வானது, 4 ஆயிரத்து 107 மையங்களில் நடைபெறுகிறது.

    தேர்வு அறைகளில் மாணவர்கள் ஒழுங்கீன செயல்களில் ஈடுபடுவதை தடுக்க, 48 ஆயிரத்து 700 ஆசிரியர்கள் தேர்வு அறை கண்காணிப்பாளர்களாக ஈடுபடுகிறார்கள். மேலும், 3 ஆயிரத்து 350 பறக்கும் படைகளும், ஆயிரத்து 241 நிலையான கண்காணிப்பு குழுக்களும் அமைக்கப்பட்டு உள்ளன.

    தேர்வு மையங்களில் குடிநீர், இருக்கை, மின்சாரம், காற்றோட்டம், வெளிச்சம் மற்றும் கழிவறை வசதிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. தேர்வறைக்குள் செல்போன் உள்பட மின்சாதன பொருட்கள் கொண்டுவர ஆசிரியர்களுக்கு தடைவிதிக்கப்பட்டு உள்ளது. மாணவர்களும், ஹால்டிக்கெட்களில் கொடுக்கப்பட்டுள்ள விதிகளை பின்பற்ற வேண்டும் என்று தேர்வுத்துறை உத்தரவிட்டுள்ளது.

    முன்னதாக, கடந்த 4-ந்தேதி தொடங்கிய பிளஸ்-1 பொதுத்தேர்வு நேற்றுடன் நிறைவடைந்தது. பிளஸ்-1 விடைத்தாள்கள் திருத்தம் மேற்கொள்ளும் பணிகள் வருகிற ஏப்ரல் மாதம் 6-ந்தேதி தொடங்குகிறது. இதில், பிளஸ்-1 அரியர் மாணவர்களின் விடைத்தாள்கள் ஏப்ரல் 6-ந்தேதியில் இருந்தும், இதர மாணவர்களின் விடைத்தாள்கள் ஏப்ரல் 15-ந் தேதியில் இருந்தும் திருத்தம் செய்யும் பணிகள் தொடங்குகிறது.

    Next Story
    ×