ஆபரேசன் சிந்தூர்: ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர்களில் இருந்து இந்தியா விலகல்?

இலங்கையில் அடுத்த மாதம் மகளிர் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெறுகிறது. செப்டம்பர் மாதம் ஆடவர் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெறுகிறது
ஆபரேசன் சிந்தூர்: ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர்களில் இருந்து இந்தியா விலகல்?
Published on

அடுத்த மாதம் இலங்கையில் மகளிர் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரும், செப்டம்பரில் ஆடவர் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரும் நடைபெற உள்ளன.

இந்நிலையில், இந்த 2 ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர்களில் இருந்தும் விலக பிசிசிஐ முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியா - பாகிஸ்தான் இடையே ஏற்பட்ட மோதலை தொடர்ந்து, இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் தற்போதைய தலைவராக பாகிஸ்தான் அமைச்சர் மோசின் நக்வி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

X

Maalai Malar
www.maalaimalar.com