

நீட் தேர்வுக்கு எதிராக வழக்கு தொடர்ந்த அரியலூர் மாணவி, தனக்கு மருத்துவம் படிக்க சீட் கிடைக்காததால் ஏற்பட்ட மன உளைச்சலில் தற்கொலை செய்துகொண்டார். இந்த சம்பவம் அவர்களின் குடும்பத்தினர் மட்டுமின்றி தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. நீட் தேர்வுக்கு காரணமான மத்திய அரசு மீது அரசியல் தலைவர்கள் கடும் விமர்சனங்களை முன்வைத்த வண்ணம் உள்ளனர்.
அனிதாவின் இல்லத்திற்கு மாவட்ட கலெக்டர் மற்றும் போலீஸ் சூப்பிரெண்டு நேரில் சென்று ஆறுதல் கூறினர்.