

சென்னை:
இந்திய குடியரசு கட்சியின் தலைவரும் முன்னாள் எம்.எல்.ஏ.வுமான செ.கு. தமிழரசன் இன்று காலை நடிகர் ரஜினிகாந்தை அவரது வீட்டில் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு சுமார் அரை மணி நேரம் நீடித்தது.
நடப்பு அரசியல் விவகாரங்களையும் ரஜினி தொடங்க இருக்கும் கட்சி குறித்தும் இருவரும் ஆலோசனை நடத்தி உள்ளனர். சந்திப்பு முடிந்த பின்னர் வெளியே வந்த செ.கு.தமிழரசன் ரஜினி மக்களுக்காக பணியாற்றுவதில் உறுதியாக இருக்கிறார் என்று கூறினார்.