2019-ம் ஆண்டின் மிகப்பெரிய பொய்யர் ராகுல் காந்தி - பிரகாஷ் ஜவடேகர்

2019-ம் ஆண்டின் மிகப்பெரிய பொய்யர் ராகுல் காந்தி என மத்திய மந்திரி பிரகாஷ் ஜவடேகர் கூறியுள்ளார்.
பிரகாஷ் ஜவடேகர்
பிரகாஷ் ஜவடேகர்
Published on

புதுடெல்லி:

மத்திய அரசின் என்.பி,ஆர்.,  என்.ஆர்.சி. அனைத்துமே ஏழைகள் மீதான வரிச்சுமை தான் என காங்கிரஸ் முன்னாள் தலைவர்  ராகுல் காந்தி குற்றம்சாட்டி இருந்தார்.

இந்நிலையில், 2019-ம் ஆண்டின் மிகப்பெரிய பொய்யர் ராகுல் காந்தி என மத்திய மந்திரி பிரகாஷ் ஜவடேகர் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக விளக்கமளித்த மத்திய மந்திரி பிரகாஷ் ஜவடேகர் கூறுகையில், 2019-ம் ஆண்டின் மிகப்பெரிய பொய்யர் ராகுல் காந்தி. பொய், வதந்திகள் பரப்புவது, ஊழல் செய்வதையே பிரதானமாக கொண்ட காங்கிரஸ் கட்சிக்கு பா.ஜ.க. கொண்டு வரும் திட்டங்கள் புரியாது.

என்.பி.ஆர். என்பது எந்தவொரு பணப்பரிவர்த்தனையையும் உள்ளடக்கியது அல்ல, அதன் அம்சம் ஏழைகளை அடையாளம் காண பயன்படுத்தப்படுகிறது. இதனால் அரசாங்க நலத்திட்டங்கள்  மக்களை எளிதாக சென்றடைய உதவும் என குறிப்பிட்டுள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com