விஜய் பேசி முடித்து சென்றவுடன் பொதுக்கூட்ட திடலில் தூய்மை பணியில் ஈடுபட்ட த.வெ.க.வினர்

கூட்டத்தில் பங்கேற்றவர்களுக்கு கட்சி சார்பில், பிஸ்கட், ஸ்நாக்ஸ் மற்றும் தண்ணீர் பாட்டில்கள் தரப்பட்டது. பொதுக்கூட்டத்திற்கு வந்த தொண்டர்கள், தண்ணீரை குடித்து விட்டு பாட்டில்களை அங்கேயே போட்டு விட்டு சென்றனர்.
விஜய் பேசி முடித்து சென்றவுடன் பொதுக்கூட்ட திடலில் தூய்மை பணியில் ஈடுபட்ட த.வெ.க.வினர்
Published on

புதுச்சேரி:

புதுச்சேரி உப்பளம் துறைமுக மைதானத்தில் த.வெ.க. பொதுக்கூட்டம் நேற்று நடந்தது.

கூட்டத்தில் த.வெ.க., தலைவர் விஜய் பங்கேற்று பேசினார். அவரை பார்க்க சுமார் 5 ஆயிரம் பேருக்கு மேல் திரண்டனர். கூட்டத்தில் பங்கேற்றவர்களுக்கு கட்சி சார்பில், பிஸ்கட், ஸ்நாக்ஸ் மற்றும் தண்ணீர் பாட்டில்கள் தரப்பட்டது. பொதுக்கூட்டத்திற்கு வந்த தொண்டர்கள், தண்ணீரை குடித்து விட்டு பாட்டில்களை அங்கேயே போட்டு விட்டு சென்றனர்.

இதனால் மைதானம் அலங்கோலமாக காணப்பட்டது. கூட்டம் முடிந்து தொண்டர்கள் கலைந்து சென்றதும், கூட்டத்திற்கு ஏற்பாடு செய்த த.வெ.க. நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கட்சியின் தன்னார்வலர்களுடன் இணைந்து, மைதானத்தில் கிடந்த பிளாஸ்டிக் பாட்டில்கள் மற்றும் குப்பைகளை அகற்றி சுத்தம் செய்து தூய்மை பணியில் ஈடுபட்டனர். 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com