கேரளத்தின் முதலமைச்சர் யார்?- காங்கிரஸ் தலைவர் சன்னி ஜோசப்

காங்கிரசின் உயர்மட்ட குழு விரைவில் அறிவிக்கும்.
கேரளத்தின் முதலமைச்சர் யார்?- காங்கிரஸ் தலைவர் சன்னி ஜோசப்
Published on

கேரளத்தின் முதலமைச்சர் யார்? என்று விரைவில் அறிவிப்பு வெளியிடப்படும் என்று மாநில தலைவர் சன்னி ஜோசப் தெரிவித்தார்.

கேரளம் மாநிலம் காங்கிரஸ் கட்சி தலைவர் சன்னி ஜோசப் நேற்று கண்ணூரில் நிருபர்களிடம் கூறியதாவது:-

கேரளத்தின் புதிய முதலமைச்சர் யார்? என்பது குறித்து காங்கிரசின் உயர்மட்ட குழு விரைவில் அறிவிக்கும். அது எப்போது என்று சரியாக கூற முடியாது. ஆனால், அறிவிப்பு விரைவில் வெளிவரும்.

கேரளம் மாநில காங்கிரஸ் கட்சி, முதலமைச்சர் தேர்வு குறித்து மக்கள் மனதில் உள்ள தவறான எண்ணங்களை அகற்றவும். தொண்டர்களிடம் கட்சி குறித்து நல்ல அபிப்ராயங்களை ஏற்படுத்தவும், அனைவரிடமும் கலந்து ஆலோசித்து உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.

ராகுல் காந்தி, மல்லிகார்ஜுன கார்கே ஆகியோர் விரைவில் கேரளத்தின் புதிய முதல்-மந்திரி யார்? என்பது குறித்து அறிவிப்பார் கள். அவர்கள் கட்சியில் உள்ள தலைவர்கள், தொண்டர்களுடன் கலந்து ஆலோசித்து உள்ளனர். இதுகுறித்து மேலும் ஆலோ சனை தேவை என்று கருதவில்லை. சரியான கொள்கை வகுக்கப்பட்டு, அதன் அடிப்படையிலேயே முதலமைச்சர் தேர்ந்தெடுக்கப் படுவார் என்று அவர்கள் தெரிவித்தனர்.

கேரளம் முதலமைச்சர் யார்? என்பதை அறிய மக்கள் 6 நாட்களாக ஆர்வத்துடன் காத்திருக்கிறார்கள். இதுகுறித்து இறுதிக்கட்ட முடிவு எடுப்பதற்கு ராகுல் காந்தி, மல்லிகார்ஜுன கார்கே ஆகியோர் கலந்து ஆலோசித்து தயாராக உள்ளனர்.

கூட்டணி கட்சிக ளுடன் சோனியா காந்தி கலந்து ஆலோசித்த பின்னர். அவர்களது ஒப்புதலின் பேரில் புதிய முதலமைச்சர் பற்றிய அறிவிப்பு வெளியிடப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com