Murder | மனைவியுடன் வாக்குவாதம்... 9 மாத குழந்தையை கொன்ற கொடூர தந்தை

கோடரியால் தாக்கி சம்பவ இடத்திலேயே கொன்றதாக கூறப்படுகிறது.
Murder | மனைவியுடன் வாக்குவாதம்... 9 மாத குழந்தையை கொன்ற கொடூர தந்தை
Published on

உத்தர பிரதேச மாநிலத்தின் சுல்தான்பூரில் தனது ஒன்பது மாத குழந்தையை கோடரியால் வெட்டி கொன்ற தந்தை கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. குட்வார் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மாதா கிராமத்தில் இந்த சம்பவம் நிகழ்ந்தது.

காவல்துறையின் தகவல்படி, ஷம்புத்யாயல் கோரி என்ற நபருக்கும், அவரது மனைவி ரஞ்சுவுக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் வன்முறையாக முற்றியுள்ளது. இந்த வாக்குவாதத்தின்போது, அவர் தனது மனைவியை தாக்கியதாகவும், தனது கைக்குழந்தையான சிவன்ஷை கோடரியால் தாக்கி சம்பவ இடத்திலேயே கொன்றதாகவும் கூறப்படுகிறது.

தகவல் கிடைத்தவுடன் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். காவல் கண்காணிப்பாளர் மற்றும் உதவி காவல் கண்காணிப்பாளர் உள்ளிட்ட மூத்த அதிகாரிகளும் சம்பவ இடத்தை ஆய்வு செய்தனர்.

காவல் நிலைய அதிகாரி தருண் படேல் கூறுகையில், "காவல்துறைக் குழுவினர் குற்ற நடந்த இடத்தை ஆய்வு செய்து ஆதாரங்களை சேகரித்தனர். சடலம் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. குற்றம் சாட்டப்பட்டவர் காவலில் எடுக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகிறார்.

முதற்கட்ட விசாரணையில் குற்றம் சாட்டப்பட்டவர் மனநிலை சரியில்லாதவராக இருக்கலாம் என்று தெரியவந்துள்ளது என்றும், இது மருத்துவப் பரிசோதனைக்குப் பிறகு உறுதி செய்யப்படும்," என்று கூறினார்.

இந்த சம்பவம் குறித்த விசாரணை நடைபெற்று வருவதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com