வெற்று வாக்குறுதிகள் மூலம் வாக்குகள்: மாநிலங்களை அதளபாதாளத்திற்கு தள்ளும் எதிர்க்கட்சிகள்- மத்திய மந்திரி

எதிர்க்கட்சிகள் அவர்களுடைய மாநிலங்களை அதளபாதாளத்திற்கு தள்ளுவதில் மும்முரம் காட்டி வருகின்றன.இதற்காக இளைஞர்கள் வேலையற்றவர்கள், ஏமாற்றமடைந்தவர்கள் மற்றும் பின்தங்கியவர்கள் என்ற விலை கொடுக்கிறார்கள்.
வெற்று வாக்குறுதிகள் மூலம் வாக்குகள்: மாநிலங்களை அதளபாதாளத்திற்கு தள்ளும் எதிர்க்கட்சிகள்- மத்திய மந்திரி
Published on

மத்திய மந்திரி தர்மேந்திர பிரதான், "வெற்று வாக்குறுதிகளை அளித்து வாக்குகளை பெற்று எதிர்க்கட்சிகள் அவர்களுடைய மாநிலங்களை அதளபாதாளத்திற்கு தள்ளுவதில் மும்முரம் காட்டி வருகின்றன. இதற்காக இளைஞர்கள் வேலையற்றவர்கள், ஏமாற்றமடைந்தவர்கள் மற்றும் பின்தங்கியவர்கள் என்ற விலை கொடுக்கிறார்கள். இது மன்னிக்க முடியாத துரோகம்.

இளைஞர்களின் எதிர்காலம் சூறையாடப்படுகிறது, குறிப்பாக இளம் பெண்கள், அவர்களது சொந்த அரசாங்கங்களால் அதிர்ச்சியூட்டும் வகையில் கைவிடப்பட்டுள்ளனர். இந்த மாநிலங்கள் தங்களின் தவறான நிர்வாகம் மற்றும் ஊழல் ஆகியவற்றால் சீர்குலைந்து வருகின்றன.

இளைஞர்களுக்கு அதிகாரம் அளிப்பதிலும் வேலைவாய்ப்பை உருவாக்குவதிலும் பாஜக தொடர்ந்து செயல்பட்டு வரும் நிலையில், எதிர்க்கட்சிகள் தவறான நிர்வாகம் மற்றும் நிறைவேற்றப்படாத வாக்குறுதிகளில் சிக்கித் தவிக்கின்றன. இந்த மாநிலங்களின் மக்கள் முடிவுகளை வழங்கும் தலைமையை நோக்கிப் பார்க்க வேண்டிய நேரம் இது" எனத் தெரிவித்துள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com