search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    காங்கிரஸ் எதிர்பார்க்கும் வெற்றி கிடைக்காவிட்டால் ராகுல் காந்தி ஒதுங்கிக்கொள்ள வேண்டும்
    X

    காங்கிரஸ் எதிர்பார்க்கும் வெற்றி கிடைக்காவிட்டால் ராகுல் காந்தி ஒதுங்கிக்கொள்ள வேண்டும்

    • கடந்த 10 ஆண்டுகளாக ராகுல் காந்தியால் காங்கிரஸ் கட்சிக்கு வெற்றியை தேடித்தர முடியவில்லை.
    • ராகுல் காந்தி தனக்கு எல்லாம் தெரியும் என்று நினைக்கிறார் என்று நான் நினைக்கிறேன்.

    புதுடெல்லி:

    பீகார் மாநிலத்தை சேர்ந்த பிரபல தேர்தல் வியூக நிபுணரான பிரசாந்த் கிஷோர் செய்தி நிறுவனம் ஒன்றிற்கு அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது:-

    கடந்த 10 ஆண்டுகளாக ராகுல் காந்தியால் காங்கிரஸ் கட்சிக்கு வெற்றியை தேடித்தர முடியவில்லை. ஆனாலும் தற்போதும் அவர் தான் காங்கிரஸ் கட்சியை வழிநடத்தி வருகிறார். மற்றவர்கள் கட்சியை வழிநடத்த அவர் அனுமதிக்கவில்லை.

    நடைமுறையில் என்னென்ன வழிகள் எல்லாம் இருக்கிறதோ அத்தனையையும் ராகுல் காந்தி முயற்சி செய்து பார்த்து வருகிறார். ஆனாலும் கடந்த 10 ஆண்டுகளில் அவரால் கட்சியை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல முடியவில்லை. மேலும் வேறு யாரையும் வழிநடத்தவும் அவர் விடவில்லை. என்னை பொறுத்தவரை இது ஜனநாயக விரோதம்.

    கடந்த 10 வருடமாக இந்த வேலையை செய்து வெற்றி பெறாமல் இருக்கும் போது அவர் ஓய்வெடுத்து எடுத்துக் கொள்வதில் எந்த தவறும் இல்லை. 5 ஆண்டுகள் வேறு யாரிடமாவது பொறுப்பை ஒப்படைக்கலாம். இதனால் கட்சிக்கு எந்த பாதிப்பும் ஏற்பட்டு விடாது. ராஜீவ் காந்தி இறந்த போது சோனியா காந்தி இதை செய்தார்.

    ராகுல் காந்தி தனக்கு எல்லாம் தெரியும் என்று நினைக்கிறார் என்று நான் நினைக்கிறேன். உங்களுக்கு உதவி தேவை என்பதை உணரவில்லை. என்றால் யாராலும் உங்களுக்கு உதவ முடியாது. தான் நினைப்பதை செய்யக்கூடிய ஒருவர் நமக்கு தேவை என்று அவர் நம்புகிறார். அது சாத்தியமில்லை.

    2019-ம் ஆண்டு காங்கிரஸ் படுதோல்வி அடைந்த போது கட்சி தலைவர் பதவியில் இருந்து விலகுவதாகவும், கட்சியை வேறு யாராவது வழி நடத்தட்டும் என்றும் அவர் எழுதினார். ஆனால் அவர் சொன்னதுக்கு மாறாக நடந்து வருகிறார். தலைவர் பதவியை ராஜினாமா செய்தாலும் முக்கிய முடிவுகள் எடுப்பதில் ராகுல் தான் இறுதியானவர்.


    ஒரு தொகுதி தொடர்பான முடிவுகளுக்கு கூட ராகுல் காந்தியின் ஒப்புதல் தேவை என்பதை பல தலைவர்கள் தனிப்பட்ட முறையில் ஒப்புக்கொள்வார்கள்.

    எந்த ஒரு தனிநபரையும் விட காங்கிரசும், அதன் ஆதரவாளர்களும் பெரியவர்கள் என்பதால் கட்சிக்கு வழிவிடுவதில் ராகுல் காந்தி பிடிவாதமாக இருக்கக் கூடாது. காங்கிரசில் ஒரு கட்சியாக மட்டும் பார்க்க கூடாது. நாட்டின் அது பிரதிநிதித்துவப்படுத்தும் இடத்தை ஒரு போதும் முடிவுக்கு கொண்டு வந்து விட முடியாது. அது சாத்திய மில்லை.

    காங்கிரஸ் அதன் வரலாற்றில் பல முறை பரிணாம வளர்ச்சி அடைந்து, மறு பிறவி எடுத்துள்ளது. தேர்தல் ஆணையம், நீதித்துறை மற்றும் ஊடகங்கள் போன்ற அமைப்புகள் சமரசம் செய்து கொண்டதால் தனது கட்சி தேர்தலில் பின்னடைவை சந்தித்து வருகிறது என்று ராகுல் காந்தி கூறுவது உண்மையல்ல.

    2014-ம் ஆண்டு தேர்தலில் பா.ஜ.க.வுக்கு எந்த ஒரு அதிகாரமும் இல்லை. ஆனால் அப்போதே 206 இடங்களில் இருந்த காங்கிரஸ் வெறும் 44 இடங்களில் மட்டுமே வெற்றி பெற முடிந்தது. காங்கிரஸ் கட்சியின் கட்டமைப்பிலேயே குறைபாடுகள் இருக்கிறது. அதை சரிசெய்வது வெற்றிக்கு அவசியம்.

    நீங்கள் கடந்த 1984-ம் ஆண்டு முதல் தேர்தல்களை பார்த்தீர்கள் என்றால் அதில் வாக்கு சதவிகிதம் மற்றும் மக்களவை, சட்டமன்ற தொகுதிகளில் தொடர்ந்து சரிவையே சந்தித்து வருகிறது. காங்கிரசில் இப்போது சிக்கல் என்பது தனிப்பட்ட நபர்களால் வருவது அல்ல. அது கட்சியின் கட்டமைப்பில் இருக்கும் சிக்கல்.

    மீண்டும் மீண்டும் தோல்வி அடைந்தாலும் கட்சியை நான்தான் அதில் இருந்து மீட்பேன் என்று ராகுல் காந்தி பிடிவாதமாக இருக்கக் கூடாது. வருகிற பாராளுமன்ற தேர்தலில் காங்கிரசுக்கு எதிர்பார்த்த வெற்றி கிடைக்காவிட்டால் ராகுல் காந்தி ஒதுங்கி வழிவிட வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×