search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    காங்கிரஸ் செயற்குழுவில் அதிரடி மாற்றங்கள்- அடுத்த வாரம் அறிவிப்பு வெளியாக வாய்ப்பு
    X

    காங்கிரஸ் செயற்குழுவில் அதிரடி மாற்றங்கள்- அடுத்த வாரம் அறிவிப்பு வெளியாக வாய்ப்பு

    • புதிய செயற்குழுவில் தாழ்த்தப்பட்டவர்களுக்கும் அதிக பிரதிநிதித்துவம் இருக்கும் என்று தெரிகிறது.
    • சில அதிருப்தியாளர்களை முக்கிய பொறுப்புகளில் இருந்து கழட்டி விட கார்கே திட்டமிட்டுள்ளார்.

    புதுடெல்லி:

    கர்நாடக சட்டசபைத் தேர்தலில் அமோக வெற்றி பெற்றதால் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் அதே உற்சாகத்துடன் 5 மாநில சட்டசபைத் தேர்தலையும் சந்திக்க தயாராகி வருகிறார்கள்.

    கடந்த 3 நாட்களாக, மத்திய பிரதேசம், ராஜஸ்தான், தெலுங்கானா, சத்தீஸ்கர், மிசோரம் ஆகிய 5 மாநில பிரதிநிதிகளை அழைத்து ராகுல், கார்கே இருவரும் தீவிர ஆலோசனை நடத்தினார்கள். அதன்படி விரைவில் புதிய அறிவிப்புகளை வெளியிட காங்கிரஸ் மேலிடம் திட்டமிட்டுள்ளது.

    இதற்கிடையே காங்கிரஸ் கட்சி நிர்வாகத்தில் பல அதிரடி மாற்றங்களை கொண்டு வரவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. கார்கே 8 மாதங்களுக்கு முன்பு தலைவராக பதவி ஏற்றதும் காங்கிரஸ் செயற்குழுவை மாற்றி அமைக்க முடிவு செய்தார். இளைஞர்கள், பெண்களுக்கு செயற்குழுவில் அதிக முக்கியத்துவம் கொடுக்க திட்டமிட்டுள்ளார்.

    அடுத்த வாரம் செயற்குழு மாற்றம் பற்றிய அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த புதிய செயற்குழுவில் தாழ்த்தப்பட்டவர்களுக்கும் அதிக பிரதிநிதித்துவம் இருக்கும் என்று தெரிகிறது.

    ராஜஸ்தான் மாநிலத்தில் சச்சின் பைலட் கடும் அதிருப்தியுடன் இருக்கிறார். எனவே அருக்கு தேசிய அளவில் முக்கிய பதவி வழங்கப்படும் என்று தெரிகிறது. பிரியங்காவுக்கு துணைத் தலைவர் பதவி கொடுக்கப்படும் என்று தெரிய வந்துள்ளது.

    ஆனால் சில அதிருப்தியாளர்களை முக்கிய பொறுப்புகளில் இருந்து கழட்டி விடவும் கார்கே திட்டமிட்டுள்ளார். அது போல சில மாநில காங்கிரஸ் தலைவர்களும் மாற்றப்பட உள்ளனர். எனவே அடுத்த வாரம் காங்கிரஸ் வட்டாரங்களில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது என்று கூறப்படுகிறது.

    Next Story
    ×