மகாராஷ்டிரா சட்டசபை தேர்தல்... பாஜகவுக்கு ஆதரவாக பிரசாரத்தில் ஈடுபடும் இன்ஸ்டா பிரபலம்

அனைத்து வாக்குகளும் நவம்பர் 23-ந் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.அரசியல் கட்சிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
மகாராஷ்டிரா சட்டசபை தேர்தல்... பாஜகவுக்கு ஆதரவாக பிரசாரத்தில் ஈடுபடும் இன்ஸ்டா பிரபலம்
Published on

288 உறுப்பினர்களை கொண்ட மகாராஷ்டிரா மாநிலத்தில் இம்மாதம் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. வரும் 20-ந்தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. அன்று பதிவாகும் வாக்குகள் அனைத்தும் வருகிற 23-ந்தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படுகிறது.

மகாராஷ்டிராவில் சுமார் 9.63 கோடி வாக்காளர்கள் உள்ளனர். இதில் 4.97 கோடி ஆண் வாக்காளர்களும், 4.66 கோடி பெண் வாக்காளர்களும் அடங்குவர். 1.85 கோடி இளம் வாக்காளர்கள் (வயது 18-29) உள்ளனர். இதில் 20.93 லட்சம் முதல் முறை வாக்காளர்கள் (வயது 18-19) ஆவார்கள். அனைத்து வாக்குகளும் நவம்பர் 23-ந் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.

வாக்குப்பதிவுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், பிரபல தேநீர் கடைக்காரரும் இன்ஸ்டாகிராம் பிரபலமுமான டோலி சாய்வாலா எனும் சுனில் பாட்டில் பா.ஜ.க.வுக்கு ஆதரவாக தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார். 

X

Maalai Malar
www.maalaimalar.com