search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    கேரளாவில் சிறுமி பாலியல் பலாத்காரம்- முதியவருக்கு 64 ஆண்டுகள் ஜெயில்
    X

    கேரளாவில் சிறுமி பாலியல் பலாத்காரம்- முதியவருக்கு 64 ஆண்டுகள் ஜெயில்

    • நீண்ட நாட்களாக இந்த தொல்லையில் இருந்த சிறுமி, ஒரு நாள் இதுபற்றி புகார் செய்தார்.
    • வழக்கு விசாரணை சாவக்காடு முதலாவது சிறப்பு கோர்ட்டில் நடைபெற்று வந்தது.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் சாவக்காடு திருவத்திரை பகுதியைச் சேர்ந்தவர் மொய்து (வயது 70). இவர் 14 வயது சிறுமியை கடந்த சில ஆண்டுகளாக பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். மேலும் இதுபற்றி வெளியில் யாரிடமாவது கூறினால் கொலை செய்து விடுவேன் என்றும் மிரட்டி உள்ளார்.

    நீண்ட நாட்களாக இந்த தொல்லையில் இருந்த சிறுமி, ஒரு நாள் இதுபற்றி புகார் செய்தார். அதன்பேரில் சாவக்காடு போலீசார் போக்சோ வழக்குப்பதிவு செய்து மொய்துவை கைது செய்து விசாரணை நடத்தினர். இது தொடர்பான வழக்கு விசாரணை சாவக்காடு முதலாவது சிறப்பு கோர்ட்டில் நடைபெற்று வந்தது.

    இந்த வழக்கில் மொய்துவுக்கு ஆயுள் தண்டனையும், 64 ஆண்டுகள் கூடுதல் கடுங்காவல் தண்டனையும் விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.

    Next Story
    ×