என் மலர்
இந்தியா

திருப்பதி கோவிலில் பக்தர்கள் நேரடி தரிசனம்
- ஆந்திராவில் சங்கராந்தி பண்டிகை என்பதால் காலையில் பக்தர்கள் குறைந்த அளவு வந்திருந்தனர்.
- பக்தர்கள் மகிழ்ச்சியுடன் சென்றனர்.
திருப்பதி:
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தொடர் விடுமுறை காரணமாக கடந்த சனிக்கிழமை முதல் பக்தர்கள் கூட்டம் அதிக அளவில் குவிந்தனர்.
நேற்று ஆந்திராவில் சங்கராந்தி பண்டிகை என்பதால் காலையில் பக்தர்கள் குறைந்த அளவு வந்திருந்தனர். மதியத்திற்கு மேல் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்து காணப்பட்டது.
இதனால் வைகுந்தம் க்யூ காம்ப்ளக்ஸ் முழுவதும் பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. 24 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
இந்த நிலையில் இன்று காலை தரிசனத்திற்கு வந்த பக்தர்களின் எண்ணிக்கை குறைந்து காணப்பட்டது. பக்தர்கள் நேரடியாக தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.
இதனால் பக்தர்கள் மகிழ்ச்சியுடன் சென்றனர்.
Next Story






