search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    சந்திரசேகர ராவ் கட்சியில் இருந்து விலகிய பெண் வேட்பாளர் காங்கிரசில் போட்டி
    X

    சந்திரசேகர ராவ் கட்சியில் இருந்து விலகிய பெண் வேட்பாளர் காங்கிரசில் போட்டி

    • சட்டமன்ற தேர்தலின் போது சந்திரசேகர ராவ் கட்சி தோல்வியை சந்தித்தது.
    • காவ்யா மீண்டும் வாரங்கல் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    தெலுங்கானா மாநிலத்தில் கடந்த சந்திரசேகர ராவ் ஆட்சியில் துணை முதல் மந்திரியாக இருந்தவர் கடியம் ஸ்ரீ ஹரி.

    இவரது மகள் கடியம் காவ்யா. சட்டமன்ற தேர்தலின் போது சந்திரசேகர ராவ் கட்சி தோல்வியை சந்தித்தது. காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது.

    இதனால் சந்திரசேகர ராவின் பி.ஆர்.எஸ். கட்சியிலிருந்து தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் விலகி காங்கிரஸ் கட்சியில் இணைந்து வருகின்றனர்.

    கடியம் ஸ்ரீ ஹரியன் மகள் காவ்யா வாரங்கல் தொகுதியில் போட்டியிட பி.ஆர்.எஸ். கட்சி வேட்பாளராக அறிவிக்கப்பட்டு இருந்தார்.

    அவர் திடீரென போட்டியில் இருந்து விலகி காங்கிரசில் சேர்ந்தார். காவ்யா மீண்டும் வாரங்கல் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×