சாதி தீண்டாமை.. மாணவர் மீது தாக்குதல் நடத்திய ஷிண்டே சேனா தலைவர் மீது வழக்குப் பதிவு

ஷிண்டே சேனா தலைவர் மற்றும் பலர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.கோவிலுக்குள் செல்ல முயன்றவர்களை இருப்பு கம்பியால் தாக்கியுள்ளனர்.
Vikas Repale
Published on

கோவில் வளாகத்திற்குள் சிலர் அனுமதிக்க மறுத்து, அவர்கள் மீது கொடூர தாக்குதல் நடத்திய சம்பம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. தானேவில் அரங்கேறிய இந்த கொடூர சம்பவத்தில் ஷிண்டே சேனா தலைவர் மற்றும் பலர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

சாதி பாகுபாடு காரணமாக 25 வயது மாணவர் மற்றும் அவரது சமூகத்தை சேர்ந்த சிலருக்கு கோவிலுக்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டு இருக்கிறது. இது குறித்த கேட்ட போது ஷிண்டே சேனா தலைவர் மற்றும் பலர் ஒன்றுகூடி மாணவர் மற்றும் அவருடன் கோவிலுக்குள் செல்ல முயன்றவர்களை இருப்பு கம்பியால் தாக்கியதோடு, அவர்கள் மீது காலணியை வீசியுள்ளனர்.

இது குறித்து பாதிக்கப்பட்டவர் அளித்த புகாரில் விகாஸ் ரெபேல் மற்றும் பலர் மீது வன்கொடுமை தடுப்பு சட்டம், சட்டவிரோதமாக ஒன்றுகூடுதல், கலவரம் தூண்டுதல் மற்றும் பல சட்டப்பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

இந்த சம்பவத்தில் சிக்கியுள்ள நபர் ஒருவர் மீது ஏற்கனவே பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. மேலும், இந்த விவகாரம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை என்று வேகிள் எஸ்டேட் காவல் நிலைய அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இந்த விவகாரம் குறித்து விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com