ரெயில்வே திட்டம்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பதில்

ரெயில் திட்டங்களுக்கு தேவையானவற்றில் 24% நிலத்தையே தமிழ்நாடு அரசு கையகப்படுத்தியுள்ளது. நிலம் கையகப்படுத்தியதற்கு ரூ.1,465 கோடி தமிழ்நாடு அரசுக்கு வழங்கப்பட்டுள்ளது.
ரெயில்வே திட்டம்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பதில்
Published on

தமிழ்நாட்டில் செயல்படுத்தப்படும் ரெயில்வே திட்டங்களுக்கான நிதியை விரைந்து வழங்கிடவும், முக்கியமான திட்டங்களை மீண்டும் தொடங்கிடவும், தமிழ்நாட்டிற்குக் கூடுதலாக புதிய ரெயில்வே திட்டங்களை அனுமதித்திடவும் ரெயில்வே அமைச்சகத்திற்கு உரிய அறிவுரைகளை வழங்கிடுமாறு கோரி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதி இருந்தார்.

இந்நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பதில் அளித்துள்ளார்.

அதில், "தமிழ்நாட்டில் ரெயில் திட்டங்களுக்கு தேவையானவற்றில் 24% நிலத்தையே மாநில அரசு கையகப்படுத்தியுள்ளது. நிலம் கையகப்படுத்தியதற்கு ரூ.1,465 கோடி தமிழ்நாடு அரசுக்கு வழங்கப்பட்டுள்ளது. நிலம் கையகப்படுத்த நிதி ஒதுக்கவில்லை என முதலமைச்சர் கூறியுள்ளது அடிப்படை ஆதாரமற்றது.

மதுரை - தூத்துக்குடி ரெயில்வே திட்டத்திற்கு 91% நிலம் கையகப்படுத்தும் பணி முடியவில்லை. திண்டிவனம் - செஞ்சி திருவண்ணாமலை ரெயில் திட்டத்திற்கு 86% நிலம் கையகப்படுத்தப்படவில்லை. ராமேஸ்வரம் - தனுஷ்கோடி திட்டத்திற்கு மாநில அரசு ஒத்துழைக்கவில்லை" என்று தெரிவித்துள்ளார். 

X

Maalai Malar
www.maalaimalar.com