பெயரில் இந்தியா இருந்தாலும் இவர்களின் நெஞ்சில் பாகிஸ்தான் இருக்கிறது: பா.ஜ.க. தாக்கு

இந்தியா பெயரில் இருந்தாலும், பாகிஸ்தான் இவர்களின் நெஞ்சில் இருக்கிறது.காங்கிரஸ் நேர்முகமாக பாகிஸ்தானின் பக்கம் நிற்கிறது என தெரிவித்தார்.
பெயரில் இந்தியா இருந்தாலும் இவர்களின் நெஞ்சில் பாகிஸ்தான் இருக்கிறது: பா.ஜ.க. தாக்கு
Published on

புதுடெல்லி:

மத்திய பிரதேசத்தின் போபாலில் நடைபெற்ற காங்கிரஸ் கூட்டத்தில் மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி பங்கேற்றார். அப்போது அவர் பேசுகையில், வாஷிங்டனின் ஒரு தொலைபேசி அழைப்புக்குப் பிறகு பிரதமர் மோடி சமாதானம் செய்துகொண்டார் என கூறியிருந்தார்.

இதையடுத்து, இது நம் தேசத்தின் பாதுகாப்பையும், பிரதமரின் தன்னம்பிக்கையையும் கேள்விக்கு உள்ளாக்குகிறது என பா.ஜ.க. கண்டனம் செய்தது.

மேலும், ஆபரேஷன் சிந்தூர் பற்றிய ராகுல் காந்தியின் விமர்சனங்கள் இந்திய ராணுவத்தையும், அதன் தியாகத்தையும் இழிவுபடுத்துவதாக குற்றம் சாட்டியது.

இந்நிலையில், பா.ஜ.க. தேசிய செய்தித் தொடர்பாளர் சுதான்ஷு திரிவேதி கூறியதாவது:

பாகிஸ்தானுக்குத் திருப்தியாக இருக்கும் வகையில் பேசிய ராகுல் காந்தி அந்நாட்டு ராணுவத் தலைவர், பிரதமர், மற்றும் பயங்கரவாத தலைவர்களையும் கூட மிஞ்சுகிறார்.

அவரது கூச்சலான விமர்சனங்கள், அவருடைய ஆழமற்ற அரசியல் புரிதலை வெளிக்கொணருகின்றன.

இந்தியாவின் வரலாற்றை மறைத்துப் பேசும் காங்கிரஸ், நேர்முகமாக பாகிஸ்தானின் பக்கம் நிற்கிறது.

இந்தியா பெயரில் இருந்தாலும், பாகிஸ்தான் இவர்களின் நெஞ்சில் இருக்கிறது.

ராகுலின் கருத்துகள் பொறுப்பற்றதும், அரசியல் அறப்பிழைகளுடனும் கூடியவை. இவையெல்லாம் அவரது ஆலோசகர்கள் தந்த யோசனை எனில், அவர்களை உடனே மாற்றிக்கொள்ள வேண்டும் என தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com