

மேற்கு வங்காளத்தின் முதல் பா.ஜ.க. முதல் மந்திரி யாக சுவேந்து அதிகாரி இன்று பதவியேற்றார். பதவியேற்பு விழாவில், பிரதமர் மோடி உள்ளிட்ட பா.ஜனதா தலைவர்கள் கலந்து கொண்டனர். பதவியேற்பு விழா தொடங்குவதற்கு முன்பு பிரதமர் மோடி பா.ஜனதா மூத்த தொண்டர் ஒருவரின் காலில் விழுந்து ஆசி பெற்றார். 98 வயதான மாகன்லால் சர்க்காரின் காலில் விழுந்து வணங்கினார். அவரிடம் ஆசிபெற்று ஆரத்தழுவினார்.
1953-ம் ஆண்டில் காஷ்மீரில் இந்திய கொடியை ஏற்றும் இயக்கத்தின்போது சியாம பிரசாத் முகர்ஜியுடன் சென்றிருந்த போது சர்க்கார் கைது செய்யப்பட்டார். 1980-ம் ஆண்டு பா.ஜ.க. உருவான போது அவர் மேற்கு தினாப்பூர், ஜல்பாகூரி டார்ஜிலிங் மாவட்டங்களில் அமைப்பு ஒருங்கிணைப்பாளராக இருந்தார்.
கட்சியின் வளர்ச்சிக்காக அவர் பெரும்பாடுப்பட்டார். மூத்த தொண்டரான அவரை பிரதமர் மோடி அணைத்துக் கொண்டபோது விழாவில் கூடி இருந்த தொண்டர்கள் மகிழ்ச்சியில் ஆரவாரம் செய்தனர்.