

திருவனந்தபுரம்:
கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டம் பரியாரம் அருகே உள்ள பெரிங்கோம் பகுதியில் கல் கிரஷர் தொழிற்சாலை உள்ளது. இங்கு ஒடிசா உள்ளிட்ட வடமாநிலங்களை சேர்ந்த பலரும் வேலை பார்த்து வருகின்றனர். நேற்று பணி நடைபெற்றபோது, தொழிலாளி ஒருவர் கிரஷர் எந்திரத்தில் சிக்கினார். அவரது அலறல் சத்தம் கேட்டு சக தொழிலாளர்கள் எந்திரத்தை நிறுத்தினர்.
பின்னர் தீயணைப்பு படையினர் விரைந்து வந்து எந்திரத்தில் சிக்கி நசுங்கி பலியானவரை மீட்டனர். தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில் அவரது பெயர் ஜூகல்டெஹரி (வயது 57), ஒடிசா மாநிலத்தை சேர்ந்தவர் என தெரியவந்தது.