குஜராத்தில் விலங்குகள் மீட்பு மையத்தை பார்வையிட்டார் பிரதமர் மோடி

பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி நேற்று குஜராத் வந்தடைந்தார்.புகழ்பெற்ற சோம்நாத் கோவிலுக்குச் சென்ற பிரதமர் மோடி சாமி தரிசனம் செய்தார்.
குஜராத்தில் விலங்குகள் மீட்பு மையத்தை பார்வையிட்டார் பிரதமர் மோடி
Published on

அகமதாபாத்:

பிரதமர் நரேந்திர மோடி கிர் வனவிலங்கு சரணாலயத்தின் தலைமையகமான சாசனில் நடைபெறும் தேசிய வனவிலங்குகள் வாரிய கூட்டத்திற்கு தலைமை தாங்குவது உள்பட பல்வேறு நிகழ்ச்சிகளுக்காக நேற்று குஜராத் வந்தடைந்தார்.

இந்நிலையில், ஜாம்நகரில் உள்ள வந்தாரா விலங்குகள் மீட்பு, பாதுகாப்பு மற்றும் மறுவாழ்வு மையத்தை பிரதமர் மோடி இன்று பார்வையிட்டார்.

வந்தாரா விலங்குகள் மையம் 3 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. இங்கு 43 இனங்களைச் சேர்ந்த 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விலங்குகள் உள்ளன.

அதன்பின், பிரதமர் மோடி புகழ்பெற்ற வழிபாட்டுத் தலமான சோம்நாத் கோவிலுக்குச் சென்று சாமி தரிசனம் செய்தார்.

பிரதமர் மோடி ஸ்ரீ சோம்நாத் அறக்கட்டளையின் தலைவர் என்பது குறிப்பிடத்தக்கது

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com