search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    மாணவர்களுடன் கலந்துரையாடுவதை பலர் கேலி செய்கிறார்கள்- பிரதமர் மோடி வேதனை
    X

    மாணவர்களுடன் கலந்துரையாடுவதை பலர் கேலி செய்கிறார்கள்- பிரதமர் மோடி வேதனை

    • நீங்கள் அனைவரும் இங்கு கூடி இந்தியாவின் எதிர்காலத்தை எப்படி உருவாக்குவது என்று ஆலோசித்துள்ளீர்கள்.
    • ஒரு சுற்றறிக்கையை அனுப்புவதன் மூலம் குழந்தைகளின் வாழ்க்கையை என்னால் உருவாக்க முடியாது.

    புதுடெல்லி:

    தேசிய படைப்பாளர்கள் விருது வழங்கும் விழா இன்று டெல்லியில் உள்ள பாரத மண்டபத்தில் நடந்தது. முதல் முறையாக இவ்விழா நடைபெற்றது. இதில் பிரதமர் மோடி கலந்து கொண்டு விருதுகளை வழங்கினார்.

    சிறந்த கதை சொல்லல் விருது, ஆண்டின் பிரபல படைப்பாளி, பசுமை சாம்பியன் விருது, சமூக மாற்றத்திற்கான சிறந்த படைப்பாளி, மிகவும் தாக்கத்தை ஏற்படுத்தும் விவசாய படைப்பாளி, தூய்மை தூதர் விருது, கல்விப் பிரிவில் சிறந்த படைப்பாளி உள்பட 20 பிரிவுகளில் விருதுகள் வழங்கப்பட்டன.

    விழாவில் விருதுகளை வழங்கி பிரதமர் மோடி பேசியதாவது:-

    இன்று நீங்கள் அனைவரும் இங்கு கூடி இந்தியாவின் எதிர்காலத்தை எப்படி உருவாக்குவது என்று ஆலோசித்துள்ளீர்கள். காலம் மாறும் போது, ஒரு புதிய சகாப்தம் தொடங்கும் போது, அதற்கு ஏற்ப மாற்றியமைப்பது ஒவ்வொரு நாட்டின் பொறுப்பாகும்.

    அந்த பொறுப்பை இன்று பாரத மண்டபத்தில் இந்தியா நிறைவேற்றுகிறது. டேட்டா புரட்சியில் இருந்து மலிவான மொபைல் போன்கள் வரை உள்ளடக்கத்தை உருவாக்குபவர்களுக்கு ஒரு புதிய உலகத்தை உருவாக்கி உள்ளது.

    இந்த விருது வழங்கும் நிகழ்ச்சியின் பெருமை, டிஜிட்டல் உள்ளடக்கத்தை உருவாக்கும் இளைஞர்களுக்குச் சேரும்.

    நான் மாணவர்களுடன் தேர்வு பற்றிய விவாதம் நடத்துவது உங்கள் அனைவருக்கும் தெரியும். ஆனால் அதை பலர் கேலி செய்கிறார்கள். பிரதமர் ஏன் இதையெல்லாம் செய்கிறார் என்று நினைக்கிறார்கள்? எனக்குத் தெரியும். ஒரு சுற்றறிக்கையை அனுப்புவதன் மூலம் குழந்தைகளின் வாழ்க்கையை என்னால் உருவாக்க முடியாது.

    ஆனால் நான் அவர்களுடன் தொடர்பு கொண்டு அவர்களின் பிரச்சினைகளை அறிந்து கொள்ள வேண்டும். நான் ஒவ்வொரு வருடமும் இந்த திட்டத்தை தவறாமல் செய்கிறேன்.

    இந்தியா, அதன் கலாச்சாரம், பாரம்பரியம் பற்றி உலகத்துடன் கொள்ள 'இந்தியாவில் உருவாக்கம்' இயக்கத்தைத் தொடங்குவோம். பெண்கள் சக்தியை உள்ளடக்கத்தின் ஒரு பகுதியாக மாற்றுமாறு படைப்பாளிகளை கேட்டு கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    Next Story
    ×