இந்தியாவில் மீண்டும் ஊரடங்கு?.. மத்திய அரசு விளக்கம் |Lockdown

பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி இதுகுறித்து விளக்கம் அளித்துள்ளார்.
இந்தியாவில் மீண்டும் ஊரடங்கு?.. மத்திய அரசு விளக்கம் |Lockdown
Published on

மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் போர்ச் சூழலால் ஏற்பட்டுள்ள எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக, இந்தியாவில் மீண்டும் 'கோவிட்' காலத்தைப் போன்ற ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ளதாக வதந்தி பரவி வருகிறது.

இந்நிலையில் மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி இதுகுறித்து விளக்கம் அளித்துள்ளார்.

அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில், "இந்தியாவில் ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ளதாக பரவும் வதந்திகள் முற்றிலும் உண்மைக்கு மாறானவை. அத்தகைய எந்த ஒரு திட்டமும் இந்திய அரசிடம் இல்லை.

இத்தகைய இக்கட்டான சூழலில் பொதுமக்கள் அமைதியாகவும், பொறுப்புடனும், ஒற்றுமையுடனும் இருக்க வேண்டும்.

பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையின்கீழ், குடிமக்களுக்குத் தேவையான எரிபொருள், மின்சாரம் மற்றும் இதர அத்தியாவசியப் பொருட்கள் தடையின்றி கிடைப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன.

உலகளாவிய நிச்சயமற்ற சூழலிலும் சவால்களை எதிர்கொள்ள இந்தியா முழுமையாகத் தயாராக உள்ளது என்று தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com