தனது கட்சியை பா.ஜனதாவுடன் இணைத்தார் பிசி ஜார்ஜ்

2019-ம் ஆண்டு மதசார்பற்ற ஜனபக்சம் கட்சியை தொடங்கினார் பிசி ஜார்ஜ்.இவர் கேரள மாநிலத்தில் ஏழு முறை எம்.எல்.ஏ.-வாக தேர்வு செய்யப்பட்டவர்.
தனது கட்சியை பா.ஜனதாவுடன் இணைத்தார் பிசி ஜார்ஜ்
Published on

கேரள மாநிலத்தில் ஏழு முறையாக எம்.எல்.ஏ.-வாக தேர்வு செய்யப்பட்டவர் பிசி ஜார்ஜ். இவர் அம்மாநிலத்தில் மதசார்பற்ற கேரள ஜனபக்சம் என்ற கட்சியை தொடங்கிய நடத்தி வந்தார். இந்த நிலையில் பாராளுமன்ற தேர்தல் வரவிருக்கும் நிலையில் தனது கட்சியை பா.ஜனதாவுடன் இணைத்துக் கொண்டார்.

டெல்லியில் நடைபெற்ற இணைப்பு விழாவில் ஜார்ஜ் உடன், அவரது மகன் ஷான் மற்றும் கட்சியின் முக்கிய தலைவர்கள் கலந்து கொண்டார். இதில் கேரள மாநிலத்திற்கான அரசியல் விவகாரத்திற்கான பொறுப்பாளர் பிரகாஷ் ஜவடேகர் மற்றும் மூத்த பா.ஜனதா தவைவர்கள் கலந்து கொண்டனர்.

இந்தியாவின் 2047 விக்சித் பாரத்திற்கான பிரதமர் மோடியின் திட்டத்திற்கான முழு நம்பிக்கையை இந்த கட்சி இணைப்பு காட்டுகிறது என ஜார்ஜ் தெரிவித்தார்.

கேரளாவில் பா.ஜனதாகடசி வளர்ச்சி அடைய வரலாற்று பாதை தொடங்கியுள்ளது. மேலும், பிரதமர் மோடியின் திட்டம் நாட்டின் வளர்ச்சியாக மாறுவதற்கும் இந்த இணைப்பு பங்களிக்கும் என பா.ஜனதாவின் தேசிய செயலாளர் அனில் அந்தோணி தெரிவித்துள்ளார்.

ஜார்ஜ் மதசார்பற்ற கேரளா ஜனபக்சம் கட்சியை கடந்த 2019-ம் ஆண்டு தொடங்கினார். முன்னதாக மதசார்பற்ற கேரளா காங்கிரஸ் இருந்தவர். பூஞ்சார் தொகுதியில் இருந்து எம்.எல்.ஏ.வாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதுவரை ஏழு முறை எம்.எல்.ஏ.-வாக தேர்வு செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com