

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையே ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இறுதிப் போட்டியின்போது, கவுகாத்தியில் ஒரு பெரிய ஐ.பி.எல். சூதாட்ட கும்பல் பிடிபட்டது. இதன் முக்கிய சூத்திரதாரி உட்பட எட்டு பேர் கைது செய்யப்பட்டனர்.
முக்கிய குற்றவாளியான அலோக் ஜெயின், நீண்ட காலமாக ஐ.பி.எல். மற்றும் கிரிக்கெட் சூதாட்ட கும்பலை நடத்தி வருவதாகவும், அவர் மீது ஏற்கனவே மூன்று வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் மத்திய காவல் துணை ஆணையர் ஷாம்பவி மிஸ்ரா கூறினார். "நேற்று நேரடி சூதாட்டத்தின் போது நாங்கள் அவர்களை கையும் களவுமாக பிடித்தோம்," என்று மிஸ்ரா கூறினார்.
மற்ற குற்றம் சாட்டப்பட்டவர்கள் ராஜஸ்தானை சேர்ந்த சுனில் பாஸ்கர் மற்றும் பசந்த் குமார், பீகாரை சேர்ந்த சத்ய ராம் மற்றும் லால் சாஹேப் மஹ்தோ மற்றும் கமல் உபாத்யாய், பிகாஷ் குப்தா மற்றும் அமித் குமார் ஜா கவுகாத்தியை சேர்ந்தவர்கள்.
"பல வங்கிக் கணக்குகள், 15 ஏ.டி.எம். அட்டைகள், சூதாட்ட பதிவேடு புத்தகம், நகைகள், 26 ஆவணங்கள் மற்றும் 40 தோட்டாக்கள் கொண்ட ஒரு கைத்துப்பாக்கி ஆகியவற்றைக் கண்டெடுத்துள்ளோம்," என்று மிஸ்ரா கூறினார். இந்தச் சோதனையின்போது ஒரு கோடி ரூபாய்க்கும் அதிகமான ரொக்க பணத்தையும் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
"கைதாகி இருக்கும் ஜெயினுக்கு வேறு எந்த வருமான வழியோ அல்லது தொழிலோ இருப்பதாக விசாரணையில் தெரியவந்துள்ளது," என்று மிஸ்ரா மேலும் கூறினார்.