search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    குலாம் நபி ஆசாத் நன்றி கெட்டவர்... ஜம்மு காஷ்மீர் காங்கிரஸ் தலைவர்கள் கடும் கண்டனம்
    X

    குலாம் நபி ஆசாத் நன்றி கெட்டவர்... ஜம்மு காஷ்மீர் காங்கிரஸ் தலைவர்கள் கடும் கண்டனம்

    • ராகுல் காந்தி எங்கெங்கு போகிறார், யாரை சந்திக்கிறார் என்று என்னால் முழுமையாக சொல்ல முடியும் என ஆசாத் பேச்சு
    • குலாம் நபி ஆசாத்தின் விமர்சனம் துரோகத்தின் வெளிப்பாடாக உள்ளது என்று காங்கிரஸ் தலைவர்கள் விமர்சனம்

    ஸ்ரீநகர்:

    காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி தனிக் கட்சி தொடங்கி உள்ள குலாம்நபி ஆசாத், ராகுல் காந்தியை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். ராகுல் காந்தியும் அவரது மொத்த குடும்பமும் நாட்டின் விரும்பத்தகாத ஒரு தொழில் அதிபருடன் தொடர்பில் உள்ளனர் என்றும், இதை தன்னால் ஆதாரபூர்வமாக சொல்ல முடியும் என்றும் கூறினார்.

    ராகுல் காந்தி எங்கெங்கு போகிறார், யாரை சந்திக்கிறார் என்று என்னால் முழுமையாக சொல்ல முடியும். வெளிநாட்டுக்கு போய் அவர் யாரை சந்திக்கிறார் என்று என்னால் ஆதாரத்துடன் தகவல் தர முடியும் என்றும் குலாம் நபி ஆசாத் பேசியிருந்தார்.

    அவரது பேச்சு காங்கிரஸ் கட்சியில் கடும் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. பல ஆண்டுகள் கட்சியில் இருந்து விலகிய குலாம் நபி ஆசாத்தின் இந்த பேச்சுக்கு காங்கிரஸ் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

    குறிப்பாக ஜம்மு காஷ்மீர் மாநிலத்தைச் சேர்ந்த காங்கிரஸ் தலைவர்கள் பலர், குலாம் நபி ஆசாத்தை கடுமையாக விமர்சித்துள்ளனர். நேரு-காந்தி குடும்பத்தால் அவர் அனுபவித்த சுமார் 40 ஆண்டு கால பதவிகள் குறித்தும் குலாம் நபி ஆசாத் பேசியிருக்க வேண்டும் என கூறி உள்ளனர். குலாம் நபி ஆசாத்தின் விமர்சனம் துரோகத்தின் வெளிப்பாடாக உள்ளது என்றும், அவர் நேரு-காந்தி குடும்பத்திற்கு நன்றியில்லாதவராக மாறிவிட்டார் என்றும் கூறி உள்ளனர்.

    Next Story
    ×