search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    இந்தியாவில் தினசரி பாதிப்பு உயர்வு- மேலும் 268 பேருக்கு கொரோனா
    X

    இந்தியாவில் தினசரி பாதிப்பு உயர்வு- மேலும் 268 பேருக்கு கொரோனா

    • பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 46 லட்சத்து 86 ஆயிரத்து 879 ஆக உயர்ந்துள்ளது.
    • தொற்று பாதிப்பில் இருந்து இதுவரை 4 கோடியே 41 லட்சத்து 53 ஆயிரத்து 668 பேர் குணமடைந்து உள்ளனர்.

    புதுடெல்லி:

    இந்தியாவில் கொரோனா பாதிப்பு நேற்று முன்தினம் 169 ஆக இருந்தது. நேற்று 240 ஆக உயர்ந்த நிலையில், இன்று காலை 8 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 268 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை கூறியுள்ளது.

    இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 46 லட்சத்து 86 ஆயிரத்து 879 ஆக உயர்ந்துள்ளது. தொற்று பாதிப்பில் இருந்து இதுவரை 4 கோடியே 41 லட்சத்து 53 ஆயிரத்து 668 பேர் குணமடைந்து உள்ளனர். இதில் நேற்று 164 பேர் அடங்குவர்.

    தொற்று மீட்பு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை நேற்றை விட 104 அதிகமாகும். அதாவது தற்போது 2,439 பேர் சிகிச்சையில் உள்ளனர். கொரோனா பாதிப்பால் புதிதாக உயிரிழப்புகள் எதுவும் இல்லை. மொத்த பலி எண்ணிக்கை 5,30,772 ஆக நீடிக்கிறது.

    Next Story
    ×