search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    இமாச்சல பிரதேசத்தில் மாற்றி வாக்களித்த காங்கிரஸ் எம்.எல்.ஏ.-க்கள்: வெற்றி பெற்ற பா.ஜனதா வேட்பாளர்
    X

    இமாச்சல பிரதேசத்தில் மாற்றி வாக்களித்த காங்கிரஸ் எம்.எல்.ஏ.-க்கள்: வெற்றி பெற்ற பா.ஜனதா வேட்பாளர்

    • காங்கிரஸ் கட்சிக்கு 40 எம்.எல்.ஏ.-க்கள் உள்ளனர்.
    • 6 எம்.எல்.ஏ.க்கள் மாற்றி வாக்களித்ததால் பா.ஜனதா வேட்பாளர் வெற்றி.

    இமாச்சல பிரதேச மாநில சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றது. மொத்தம் 68 இடங்களில் காங்கிரஸ் 40 இடங்களில் வெற்றி பெற்றது. பா.ஜனதா 25 இடங்களில் வெற்றி பெற்றது. 3 மற்றவை ஆகும்.

    இந்த நிலையில்தான் இன்று மாநிலங்களை எம்.பி.க்கான தேர்தல் இன்று நடைபெற்றது. ஒரேயொரு இடத்திற்கான போட்டியில் காங்கிரஸ் கட்சியும், பா.ஜனதா கட்சியும் மல்லு கட்டின.

    காங்கிரஸ் கட்சியின் எம்.எல்.ஏ.-க்கள் அனைவரும் வாக்களித்தால் காங்கிரஸ் வேட்பாளர் எளிதாக வெற்றி பெற்று விடுவார். ஆனால், ஆறு எம்.எல்.ஏ.க்கள் மாற்றி வாக்களித்ததாக கூறப்படுகிறது. மேலும் மற்றவை வகையில் சேரும் 3 எம்.எல்.ஏ.-க்களும் பா.ஜனதாவுக்கு வாக்களித்ததாக கூறப்படுகிறது.

    இதனால் இமாச்சல பிரதேசத்தில் பா.ஜனதா சார்பில் போட்டியிட்ட ஹர்ஷ் மகாஜன் வெற்றி பெற்றதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    6 எம்.எல்.ஏ.-க்கள் மாற்றி வாக்களித்ததால் காங்கிரஸ் கட்சியின் பலன் 34 ஆகியுள்ளது. இதனால் இமாச்சால பிரதேச மாநிலத்தில் ஆட்சி அமைப்பதற்கான மெஜரிட்டியையும் இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. பா.ஜனதா சட்டமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர வாய்ப்புள்ளதாகவும் தெரிகிறது.

    இதற்கிடையே ஆறு எம்.எல்.ஏ.-க்களை அரியானா மாநிலத்திற்கு அழைத்துச் சென்றுள்ளதாக பா.ஜனதா அம்மாநில முதல்வர் குற்றஞ்சாட்டியுள்ளார்..

    இமாச்சல பிரதேசத்தில் ஆட்சி அமைக்க 35 உறுப்பினர்கள் ஆதரவு தேவை என்பது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×