

டெல்லியில் சிபிஎம் தேசிய பொதுச்செயலாளர் பேபி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
* தேர்தலுக்கு பிந்தைய கூட்டணியை ஆட்சி அமைக்க அழைக்க வேண்டும.
* எஸ்.ஆர். பொம்மை வழக்கில் உச்சநீதிமன்ற தீர்ப்பு தெளிவாக உள்ளது.
* பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டிய இடம் சட்டமன்றம் தான்.
* டெல்லியின் ஆதரவோடு சில சித்து விளையாட்டுகள் நடைபெறுகின்றன.
* அதிமுகவை ஆட்சிக்கட்டிலில் ஏற்ற முயற்சி நடக்கிறது.
* எங்கள் நிலைப்பாட்டை திமுகவிடம் சொல்லிவிட்டோம்.
* விஜய் எப்படி ஆட்சி அமைக்க உரிமை கோரினார் என எனக்கு தெரியாது.
* நாங்கள் குதிரை பேரத்திற்கு எதிரானவர்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.