search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    கைது செய்யப்பட்டதை கண்டித்து நாளை சந்திரபாபு நாயுடு, தெலுங்கு தேச கட்சியினர் உண்ணாவிரதம் அறிவிப்பு
    X

    கைது செய்யப்பட்டதை கண்டித்து நாளை சந்திரபாபு நாயுடு, தெலுங்கு தேச கட்சியினர் உண்ணாவிரதம் அறிவிப்பு

    • சந்திரபாபு நாயுடு தனக்கு ஜாமீன் வழங்க கோரி 2 முறை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
    • ஆந்திரா முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் அதிகரித்து வருகின்றனர்.

    திருப்பதி:

    ஆந்திர மாநில முன்னாள் முதல் மந்திரியும் தெலுங்கு தேசம் கட்சி தலைவருமான சந்திரபாபு நாயுடு திறன் மேம்பாட்டு வழக்கில் கைது செய்யப்பட்டு ராஜமுந்திரி ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார்.

    தெலுங்கு தேசம் மற்றும் ஜனசேனா கட்சியினர் அவரை இந்த வழக்கில் இருந்து விடுதலை செய்யக்கோரி பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

    சந்திரபாபு நாயுடு தனக்கு ஜாமீன் வழங்க கோரி 2 முறை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அவரது மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.

    இந்நிலையில் நாளை காந்தி ஜெயந்தியை முன்னிட்டு சந்திரபாபு நாயுடு ஜெயிலில் உண்ணாவிரதத்தை தொடங்குகிறார். அவரது மனைவி புவனேஸ்வரி ராஜமுந்திரியில் கட்சி தலைவர்கள் மற்றும் தொண்டர்களுடன் உண்ணாவிரதம் இருக்க ஏற்பாடுகள் செய்து வருகின்றனர்.

    இதே போல் ஆந்திரா முழுவதும் தெலுங்கு தேசம் கட்சியினரால் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட உள்ளனர். இதனால் பாதுகாப்பு ஏற்பாடுகள் அதிகரித்து வருகின்றனர். இந்த சம்பவம் ஆந்திராவில் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

    அமராவதியில் சுற்றுச்சாலை சீரமைப்பு ஊழல் வழக்கில் சந்திரபாபு நாயுடு மகன் லோகேஷ் 14-வது குற்றவாளியாக சிஐடி போலீசார் சேர்த்தனர். இந்த வழக்கில் தனக்கு முன் ஜாமீன் வழங்க கோரி ஆந்திர ஐகோர்ட்டில் லோகேஷ் மனு தாக்கல் செய்தார்.

    அவரது மனுவை விசாரித்த ஆந்திர கோர்ட்டு லோகேஷை கைது செய்யக்கூடாது வேண்டுமானால் 41 ஏ பிரிவின் கீழ் அவருக்கு நோட்டீஸ் வழங்கலாம் என உத்தரவு பிறப்பித்தனர்.

    இதையடுத்து டெல்லி அசோகா சாலையில் உள்ள தெலுங்கு தேசம் எம்.பி கல்லா ஜெயதேவி வீட்டில் இருந்த லோகேஷிடம் சிஐடி அதிகாரிகள் நேற்று மாலை நோட்டீஸ் வழங்கினார்.

    அதில் வருகிற 4-ந்தேதி காலை 10 மணிக்கு சி.ஐ.டி. அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என தெரிவித்து இருந்தனர்.

    Next Story
    ×