சிசிடிவி-இல் இருப்பது என் மகன் இல்லை - சைஃப் அலி கானை தாக்கியதாக கைதான நபரின் தந்தை பகீர்

சைஃப் அலி கான் சில தினங்களுக்கு முன்பு வீடு திரும்பினார். வழக்கில் எனது மகனை தவறாக இணைத்துள்ளனர்.
சிசிடிவி-இல் இருப்பது என் மகன் இல்லை - சைஃப் அலி கானை தாக்கியதாக கைதான நபரின் தந்தை பகீர்
Published on

பிரபல பாலிவுட் நடிகர் சைஃப் அலி கான் தனது வீட்டில் வைத்து கத்தியால் குத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கத்தி குத்தில் காயமடைந்த சைஃப் அலி கான் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்துக்கொண்டார். அறுவை சிகிச்சை செய்து கொண்ட சைஃப் அலி கான் சில தினங்களுக்கு முன்பு வீடு திரும்பினார்.

மறுபக்கம், சைஃப் அலி கானை கத்தியால் குத்திய நபர் கைது செய்யப்பட்டு அவரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அதில், சைஃப் அலி கானை கத்தியால் குத்திய நபர் வங்கதேசத்தை சேர்ந்தவர் என்றும் தனது தாயின் மருத்துவ செலவுக்கு பணம் தேவைப்பட்டதால் அவ்வாறு செய்ததாக வாக்குமூலம் அளித்திருந்தார்.

இந்த நிலையில், சைஃப் அலி கான் விவகாரத்தில் கைது செய்யப்பட்டுள்ள நபரின் தந்தை பேட்டி அளித்துள்ளார். அப்போது, இந்த வழக்கில் தனது மகனை தவறாக இணைத்துள்ளனர் என்று குற்றம்சாட்டியுள்ளார்.

இது குறித்து பேசிய அவர், சிசிடிவி கேமரா காட்சியில் காணப்படும் நபர் தனது மகன் ஷரிபுல் இஸ்லாம் ஷெஹ்சாத் முகமது ரோஹில்லா அமின் ஃபகிரின் தோற்றத்துடன் பொருந்தவில்லை என்று கூறினார். சிசிடிவி வீடியோ காட்சிகளின்படி என் மகன் ஒருபோதும் தனது தலைமுடியை நீளமாக வைத்திருப்பதில்லை. என் மகன் குற்றம் சாட்டப்படுகிறார் என்று நான் நம்புகிறேன்," என்று தெரிவித்தார்.

வங்கதேசத்தைச் சேர்ந்த ஷரிஃபுல், தனது சொந்த நாட்டில் நிலவும் அரசியல் அமைதியின்மை காரணமாக இந்தியாவுக்கு குடிபெயர்ந்ததாக அவரது தந்தை தெரிவித்தார். "இந்தியாவில் எங்களுக்கு யாரையும் தெரியாது. "இந்தியாவில் எங்களுக்கு எந்த ஆதரவும் இல்லை," என்று அவர் கூறினார்.

ஜனவரி 19 அன்று தானேயில் இருந்து குற்றம் சாட்டப்பட்டவரை மும்பை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்படுவதற்கு முன்பு அவர் வங்கதேசத்திற்கு தப்பிச் செல்லும் பணியில் ஈடுபட்டிருந்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

X

Maalai Malar
www.maalaimalar.com