கேரளாவில் ஓ.கே., மேற்கு வங்கம், அசாமில் தவாறா? EC-ஐ குற்றம்சாட்டிய ராகுலை வெளுத்து வாங்கிய பாஜக

கேரளாவில் காங்கிரஸ் வெற்றி பெற்றதை வரவேற்கும் ராகுல் காந்தி, மேற்கு வங்கம் மற்றும் அசாம் தோல்விகளுக்கு EC-ஐ குற்றம்சாட்டுவதா? என பாஜக பதில் கொடுத்துள்ளது.
கேரளாவில் ஓ.கே., மேற்கு வங்கம், அசாமில் தவாறா? EC-ஐ குற்றம்சாட்டிய ராகுலை வெளுத்து வாங்கிய பாஜக
Published on

5 மாநில சட்டசபை தேர்தல் முடிவு நேற்று வெளியானது. தமிழ்நாட்டில் எந்தவொரு கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்காத நிலையில் த.வெ.க. 108 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்க இருக்கிறது.

கேரளாவில் காங்கிரஸ் கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்க இருக்கிறது. அசாம் மற்றும் மேற்கு வங்கத்தில் பாஜக அமோக வெற்றி பெற்றது. புதுச்சேரியில் என்ஆர் காங்கிரஸ்- பாஜக கூட்டணி வெற்றி பெற்றுள்ளது.

மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் தோல்வியை ஏற்க மறுத்து வருகிறது. நாங்கள் தோற்கவில்லை. ஏன் ராஜினாமா செய்ய வேண்டும்? என மம்தா பானர்ஜி கேள்வி எழுப்பியுள்ளார்.

காங்கிரஸ் முன்னாள் தலைவரும், மக்களை எதிர்க்கட்சி தலைவருமான ராகுல் காந்தி, "அசாம் மற்றும் மேற்கு வங்கத்தில் தேர்தல் ஆணையம் ஆதரவோடு பாஜக தேர்தலை திருடிவிட்டது" எனக் குற்றம்சாட்டியிருந்தார்.

இந்த குற்றச்சாட்டுக்கு பாஜக தேசிய செய்தி தொடர்பாளர் ஷேசாத் பூனவாலா பதிலடி கொடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

இது ராகுல் காந்தியின் அப்பட்டமான பாசாங்குத்தனமும் வெட்கக்கேடும் ஆகும். கேரளாவில் அவரது கட்சி தேர்தலில் வெற்றி பெற்றுள்ளது, அங்கு SIR நடைபெற்றது. மற்றும் தேர்தல்கள் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் (EVM) மூலம் நடத்தப்பட்டன. அங்கு தேர்தல்கள் முற்றிலும் சரியாக நடந்தன. அதுவே மக்களின் தீர்ப்பாகவும் இருந்தது. இப்போது அவர் மேற்கு வங்கம் மற்றும் அசாமில் பாசாங்குத்தனமாக மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் தேர்தல் ஆணையத்தின் மீது பழி சுமத்துகிறார்.

பீகாரில் வாக்கு திருட்டு மற்றும் வாக்காளர் நீக்கங்கள் குறித்து நீங்கள் ஒரு முழு பிரச்சாரத்தையும் நடத்தினீர்கள், ஆனால் உச்ச நீதிமன்றத்தில் எந்த ஆதாரத்தையும் சமர்ப்பிக்க முடியவில்லை.

ஒவ்வொரு தேர்தலிலும் தோற்கும்போது, ​​தேர்தல் ஆணையத்தின் மீது இந்த முடிவில்லாத குற்றச்சாட்டுகளை முன்வைக்கிறீர்கள். இது, குடும்பத்தை பொறுப்புக்கூறலில் இருந்து காப்பாற்றுவதற்காக தேர்தலுக்குப் பிந்தைய ஒரு சாக்குப்போக்கு போல உள்ளது. ஆனால் எந்தவொரு தேர்தலிலும் தவறு நடந்ததாக நீதிமன்றத்தில் எந்த ஆதாரமும் வழங்கப்படவில்லை.

இவ்வாறு ஷேசாத் பூனவாலா தெரிவித்துள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com