டெல்லி - இஸ்ரேல் இடையே விமான சேவையை ரத்து செய்தது ஏர் இந்தியா

வாரம் நான்கு விமானங்களை ஏர் இந்தியா இயக்கி வருகிறது.டெல் அவிவ் நகருக்கு ஏர் இந்தியா விமான சேவையை நிறுத்தியது.
டெல்லி - இஸ்ரேல் இடையே விமான சேவையை ரத்து செய்தது ஏர் இந்தியா
Published on

இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையில் போர் பதற்றம் ஏற்பட்டுள்ளதை அடுத்து இந்தியாவில் இருந்து இஸ்ரேலின் டெல் அவிவ் நகருக்கு செல்லும் விமான சேவையை ஏர் இந்தியா தற்காலிகமாக ரத்து செய்துள்ளது.

அதன்படி டெல்லியில் இருந்து டெல் அவிவ் நகருக்கு செல்லும் நேரடி விமானங்கள் அனைத்தும் தற்போதைக்கு ரத்து செய்யப்பட்டு இருப்பதாக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். டெல்லி மற்றும் டெல் அவிவ் இடையில் ஒவ்வொரு வாரம் நான்கு விமானங்களை ஏர் இந்தியா இயக்கி வருகிறது.

இஸ்ரேல் நகரின் மீது ஹமாஸ் நடத்திய திடீர் தாக்குதலை தொடர்ந்து கடந்த ஆண்டு அக்டோபர் 7 ஆம் தேதியில் இருந்து டெல் அவிவ் நகருக்கு ஏர் இந்தியா தனது விமான சேவையை நிறுத்தியது.

அதன்பிறகு கிட்டத்தட்ட ஐந்து மாதங்கள் இடைவெளிக்கு பிறகு, கடந்த மார்ச் 3 ஆம் தேதி தான் டெல் அவிவ் நகருக்கு ஏர் இந்தியா விமான சேவைகளை மீண்டும் துவங்கியது. 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com