என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இந்தியா
அரபு நாட்டில் இருந்து விமானத்தில் கடத்தி வரப்பட்ட 5 கிலோ தங்கம் பறிமுதல்- 2 பயணிகள் கைது
- பயணியிடம் 1.8 கிலோ தங்கம் இருந்தது தெரியவந்தது.
- கடந்த 24 மணி நேரத்தில் இருவரிடம் இருந்தும் ரூ.2 கோடி மதிப்பிலான 5 கிலோ கடத்தல் தங்கம் அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டது.
திருவனந்தபுரம்:
அரபு நாடுகளில் இருந்து கேரளா வரும் விமானங்களில் அடிக்கடி தங்கம் கடத்தி வரும் சம்பவங்கள் நடந்து வருகிறது.
இதனால் கேரளாவில் உள்ள அனைத்து விமான நிலையங்களிலும் சுங்க அதிகாரிகள் 24 மணி நேரமும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். சந்தேகப்படும் பயணிகளின் உடமைகள் அனைத்தும் முழுமையாக பரிசோதித்த பின்னரே அவர்கள் வெளியே செல்ல அனுமதிக்கப்பட்டனர்.
அந்த வகையில் நேற்று அரபு நாட்டில் இருந்து கேரளாவின் கொச்சி விமான நிலையத்திற்கு வந்த பயணி ஒருவர் மீது அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. எனவே அவர்கள் அந்த பயணியை முழுமையாக பரிசோதித்தனர்.
இதில் அந்த பயணியிடம் 1.8 கிலோ தங்கம் இருந்தது தெரியவந்தது. இதனை அவர் தனது உள்ளாடையில் மறைத்து எடுத்து வந்தார். இதன் மதிப்பு ரூ.1.6 கோடியாகும். இதையடுத்து அவரை அதிகாரிகள் கைது செய்தனர். அவரது பெயர் முகமது அஷ்ரப். மலப்புரத்தை சேர்ந்தவர்.
இதுபோல நேற்று முன்தினம் இன்னொரு பயணி உடலுக்குள் கேப்ஸ்யூல் வடிவில் தங்கத்தை மறைத்து எடுத்து வந்தார். அவரது பெயர் முகமது நசீப். அவரிடம் இருந்து 1.15 கிலோ தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
கடந்த 24 மணி நேரத்தில் இருவரிடம் இருந்தும் ரூ.2 கோடி மதிப்பிலான 5 கிலோ கடத்தல் தங்கம் அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொ டர்பாக 2 பேரையும் அதிகாரிகள் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்