

2012-ம் ஆண்டிலிருந்து 17-ம் ஆண்டு வரை நடைபெற்ற ஆசிரியர் தகுதி தேர்வில் எந்த ஒரு முறைகேடும் நடைபெறவில்லை என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.
சென்னை எழும்பூரில் உள்ள ஹாக்கி மைதானத்தில் மாநில அளவிலான ஹாக்கி போட்டி மற்றும் கைப்பந்து போட்டி நேரு உள் விளையாட்டு அரங்கில் இன்று முதல் 3 நாட்கள் நடைபெற உள்ளது. இதை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தொடங்கி வைத்தார்.
கல்வித்துறைக்கு எந்த அளவுக்கு அரசு முக்கியத்துவம் கொடுத்து வருகிறது. மாணவர்களின் விளையாட்டு நலனையும் அரசு கவனமாக கவனித்து வருகிறது.
பொதுத்தேர்வுக்கான அனைத்து ஏற்பாடுகளும் அரசு சிறப்பாக செய்து வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.