விண்கலம் தரையிறங்கியது: ஆர்சிபி டுவீட்- ஏபிடி, விராட் கோலி சென்னை வந்தடைந்தனர்

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் முக்கிய வீரர்களான ஏபி டி வில்லியர்ஸ், விராட் ஆகியோர் சென்னை வந்தடைந்தனர்.
டி வில்லியர்ஸ்
டி வில்லியர்ஸ்
Published on

ஐபிஎல் கிரிக்கெட் தொடர் வருகிற 9-ந்தேதி சென்னையில் தொடங்குகிறது. முதல் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ்- ஆர்சிபி அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

இந்த போட்டியில் விளையாடுவதற்கான இரண்டு அணி வீரர்களும் சென்னை வந்த வண்ணம் உள்ளனர். அவர்கள் சென்னை வந்ததும் ஒரு வாரம் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும். அதன்பின் விளையாட்டுக்குத் தயாராவார்.

இந்திய அணி கேப்டன் விராட் கோலி இன்று சென்னை வந்தடைந்தார். அதேபோல், 360 டிகிரி என்று அழைக்கப்படும் ஏபிடி வில்லியர்ஸும் இன்று சென்னை வந்தடைந்தார். இருவரும் ஆர்சிபி அணிகள் பாதுகாப்பு வளையத்திற்குள் நுழைந்துள்ளனர்.

ஒருவாரம் முடிவடைந்த பின்னர் அணி வீரர்களுடன் இணைந்து தீவிர பயிற்சி மேற்கொள்வார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com