பெண்ணுக்கு எச்.ஐ.வி. ரத்தம்- ஐகோர்ட்டு தாமாக முன்வந்து வழக்குப்பதிவு

சாத்தூர் கர்ப்பிணி பெண்ணுக்கு எச்.ஐ.வி. ரத்தம் ஏற்றப்பட்டுள்ளது குறித்து ஐகோர்ட்டு தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்து தமிழக அரசு பதில் அளிக்க உத்தரவிட்டுள்ளது. #HIVBlood #PregnantWoman #tngovt #chennaihighcourt
பெண்ணுக்கு எச்.ஐ.வி. ரத்தம்- ஐகோர்ட்டு தாமாக முன்வந்து வழக்குப்பதிவு
Published on

சென்னை:

சென்னை ஐகோர்ட்டில் கிறிஸ்துமஸ் விடுமுறை கால நீதிமன்றம் இன்று செயல்படுகிறது. அவசர வழக்குகளை நீதிபதிகள் எஸ்.வைத்திய நாதன், பி.டி.ஆஷா ஆகியோர் விசாரிக்க தொடங்கினார்கள். அப்போது, வக்கீல்கள் ஆர்.ஒய்.ஜார்ஜ் வில்லியம்ஸ், ஆர்.கிருஷ்ண மூர்த்தி ஆகியோர் ஆஜராகி, அரசு டாக்டர்கள், ஊழியர்களின் அலட்சியமான பணியினால், இளம் கர்ப்பிணி பெண்ணுக்கு எச்.ஐ.வி. பாதிக்கப்பட்ட நபரின் ரத்தம் ஏற்றப்பட்டுள்ளது. இதுகுறித்து அவசர வழக்கை விசாரிக்கவேண்டும்’ என்று கோரிக்கை விடுத்தனர்.

அப்போது நீதிபதிகள், ‘இருவரும் முறையிடுகிறீர்கள், யார் வழக்கு மனுவை தயாரித்து தயாராக உள்ளீர்கள்?’ என்று கேள்வி எழுப்பினார்கள்.

அதற்கு வக்கீல் ஜார்ஜ் வில்லியம்ஸ், ‘இந்த விவகாரத்தை ஐகோர்ட்டின் கவனத்திற்கு கொண்டு வந்து விட்டோம். இது குறித்து தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்து, விசாரிக்க வேண்டும். அலட்சியமாக செயல்பட்ட டாக்டர், செவிலியர் உள்ளிட்ட அரசு ஆஸ்பத்திரி ஊழியர்கள் மீது குற்ற வழக்குப்பதிவு செய்து, அவர்களை கைது செய்யவேண்டும்’ என்று கூறினார்.

இதை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், ‘இந்த விவகாரம் குறித்து தாமாக முன்வந்து வழக்கை பதிவு செய்கிறோம். இந்த வழக்கிற்கு விரிவான பதில் மனுவை வருகிற ஜனவரி 3-ந்தேதி தமிழக அரசு தாக்கல் செய்யவேண்டும்’ என்று உத்தரவிட்டனர்.

அப்போது கோர்ட்டில் இருந்த கூடுதல் அட்வகேட் ஜெனரல் அரவிந்த் பாண்டியன், இந்த சம்பவம் குறித்த நிலை அறிக்கையை தாக்கல் செய்கிறோம்’ என்று கூறினார்.

முன்னதாக மதுரையை சேர்ந்த வக்கீல் நீலமேகம் இன்று மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார், அதில், 8 மாத கர்ப்பிணி பெண்ணுக்கு எச்.ஐ.வி. ரத்தம் ஏற்றப்பட்டுள்ளது.

இந்த தவறுக்கு காரணம் அரசு ரத்த வங்கிகளிலும், இதர ரத்த வங்கிகளிலும் தற்காலிக பணியாளர்கள் பணியில் இருப்பதே ஆகும். எனவே இந்த மனுவை அவசர வழக்காக எடுத்து விசாரிக்க வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதிகள் நிர்மல்குமார், சரவணன் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. மனு மீது விசாரணை மேற்கொண்ட நீதிபதிகள் இந்த விவகாரத்தில் தமிழக அரசு போதிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

எனவே இதனை அவசர வழக்காக எடுத்து நடத்த வேண்டிய அவசியம் இல்லை. எனவே மனுதாரர் வழக்கமான முறையில் நீதிமன்றத்தை அணுகலாம் என்று உத்தரவிட்டனர். #HIVBlood #PregnantWoman #tngovt #chennaihighcourt

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com