என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
கயத்தாறு அருகே 2 டன் ரேஷன் அரிசி கடத்திய வாலிபர் கைது
Byமாலை மலர்1 July 2022 8:51 AM GMT
- சந்தேகத்திற்கு இடமாக நின்ற வேனை சோதனையிட்டதில் அதில் 2 டன் ரேஷன் அரிசி இருந்ததை போலீசார் கண்டு பிடித்தனர்.
- போலீசார் வழக்குப்பதிவு செய்து ,கடத்தலுக்கு பயன்படுத்திய வேன் மற்றும் ராஜாவை கைது செய்தனர்.
கயத்தாறு:
கயத்தாறு அருகே தெற்கு இலந்தைகுளம் பகுதியில் சப்-இன்ஸ்பெக்டர் ஆண்டோணிதீலிப் மற்றும் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது அங்கு சந்தேகத்திற்கு இடமாக நின்ற வேனை சோதனையிட்டதில் அதில் 2 டன் ரேஷன் அரிசி இருந்ததை கண்டு பிடித்தனர்.
வேனை ஓட்டிவந்த வாலிபரை பிடித்து விசாரித்ததில், அவர் கயத்தாறு அருகே தெற்கு இலந்தைகுளம் கிராமத்தை சேர்ந்த ராஜா ( வயது 25) என்பதும் இவர் ரேஷன் அரிசியை மொத்தமாக வாங்கி தூத்துக்குடி, நெல்லை மாவட்ட ரைஸ் மில் மற்றும் கோழி பண்ணைகளுக்கு விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது.
இதனையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து , கடத்தப்பட்ட ரேஷன் அரிசி, கடத்தலுக்கு பயன்படுத்திய வேன் மற்றும் வேனை ஓட்டிவந்த ராஜாவை கைது செய்தனர்.
பின்னர் அவரை தூத்துக்குடி மாவட்ட உணவு பாதுகாப்பு அதிகாரியிடம் ஒப்படைத்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X