குற்றாலம் அருவியில் குளித்தவரிடம் நகை பறித்த பெண் கைது

குற்றாலம் அருவிகளில் கடந்த 2 நாட்களாக சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதி வருகிறது. சுமதி கழுத்தில் கிடந்த சங்கிலியை அருகே நின்று குளித்துக்கொண்டிருந்த ஒரு பெண் பறித்துள்ளார்.
குற்றாலம்  அருவியில் குளித்தவரிடம் நகை பறித்த பெண் கைது
Published on

நெல்லை:

தொடர்விடுமுறை காரணமாக குற்றாலம் அருவிகளில் கடந்த 2 நாட்களாக சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதி வருகிறது.

இந்நிலையில் நேற்று மெயினருவியில் பெண்கள் குளிக்கும் பகுதியில் அதிக அளவு பெண்கள் நின்று குளித்து கொண்டிருந்தனர். புளியங்குடி அருகே உள்ள சுப்பிரமணியபுரத்தை சேர்ந்த சுமதி என்ற பெண்ணும் அங்கு குளித்துள்ளார்.

நகை பறிப்பு

அப்போது அவரது கழுத்தில் கிடந்த சங்கிலியை அருகே நின்று குளித்துக்கொண்டிருந்த ஒரு பெண் பறித்துள்ளார். சுதாரித்து கொண்ட சுமதி கத்தி கூச்சலிட்டுள்ளார். உடனே அவருடன் குளித்து கொண்டிருந்த மற்ற பெண்கள், நகை பறித்த பெண்ணை பிடித்து பாதுகாப்பு பணியில் இருந்த பெண் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

அந்த பெண்ணை குற்றாலம் போலீஸ் நிலை யத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தியதில், சேலம் மாவட்டம் சீலைநாயக்கன்பட்டியை சேர்ந்த லெட்சுமி(வயது 39) என்பதும், அவர் மீது ஏற்கனவே சேலத்தில் பல்வேறு திருட்டு வழக்குகள் இருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com