பலத்த காற்று வீசுவதால் வேதாரண்யம் மீனவர்கள் இன்று மீன் பிடிக்க செல்லவில்லை

கடற்கரை பகுதிகளில் பலத்த காற்று வீசுகிறது.தமிழகம் முழுவதும் கனமழை பெய்து வருகிறது.
பலத்த காற்று வீசுவதால் வேதாரண்யம் மீனவர்கள் இன்று மீன் பிடிக்க செல்லவில்லை
Published on

வேதாரண்யம்:

வளிமண்டல மேலடுக்கு சுழற்றி காரணமாக தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. மேலும் கடற்கரை பகுதிகளில் பலத்த காற்று வீசுகிறது.

இந்த நிலையில் நாகை மாவட்டம் வேதாரண்யம் கடல் உள்பகுதிகளில் இன்று வழக்கத்தை விட அதிகளவில் பலத்த காற்று வீசி வருகிறது.

இதனால் ஆறுகாட்டுதுறை, புஷ்பவனம், வெள்ளப்பள்ளம் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட மீனவ கிராமங்களில் சுமார் 5000 மீனவர்கள் இன்று மீன் பிடிக்கச் கடலுக்கு செல்லவில்லை.

இதனால் 1000-க்கும் மேற்பட்ட பைபர் படகுகள் பாதுகாப்பாக கரையோரம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. தினந்தோறும் பரபரப்பாக காணப்படும் கடற்கரை பகுதி மீனவர்கள் மீன்பிடிக்க செல்லாததால் வெறிச்சோடி காணப்படுகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com