இ-சேவை மையம் மூலம் மத்திய அரசு நலத்திட்டங்களுக்கு விண்ணப்பிக்கலாம்

மத்திய அரசின் பொது சேவை மையங்களில் (காமன் சர்வீஸ் சென்டர்) மத்திய அரசு திட்டங்களுக்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டு வந்தன.விவசாயிகள், பொதுமக்கள் உள்ளூரில் இருக்கும் தொடக்க கூட்டுறவு வங்கிகள் மூலமே மத்திய அரசின் திட்டங்களை பெற முடியும்.
கோப்பு படம்.
கோப்பு படம்.
Published on

தாராபுரம்:

தமிழக அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் இ-சேவை மையங்கள் செயல்படுகின்றன.இந்த மையங்களில் இதுவரை, மாநில அரசு நலத்திட்டங்களுக்கும், சான்றிதழ்கள் பெறவும் மட்டுமே விண்ணப்பம் பெறப்பட்டு வந்தது. மத்திய அரசின் பொது சேவை மையங்களில் (காமன் சர்வீஸ் சென்டர்) மத்திய அரசு திட்டங்களுக்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டு வந்தன.

தற்போது நாடு முழுவதும் உள்ள தொடக்க கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலம் மத்திய அரசு நலத்திட்டங்களையும் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.அதன்படி, மத்திய அரசின் பொது சேவை மையத்தின் லாகின் அனுமதி, தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்க இ-சேவை மையங்களுக்கு வழங்கப்படுகிறது.

இதன் மூலம் விவசாயிகள், பொதுமக்கள் உள்ளூரில் இருக்கும் தொடக்க கூட்டுறவு வங்கிகள் மூலமே மத்திய அரசின் திட்டங்களை பெற முடியும்.இது மட்டுமின்றி, தொடக்க கூட்டுறவு வங்கிகள், சமையல் கியாஸ் வினியோக உரிமை, பெட்ரோல், டீசல் வினியோக உரிமை உட்பட, 25 விதமான வணிக செயல்பாடுகளில் ஈடுபடவும் வாய்ப்பு ஏற்படுத்தப்பட உள்ளது.

வரும் நாட்களில் அனைத்து தொடக்க கூட்டுறவு வங்கிகளிலும், மத்திய அரசு திட்டங்களுக்கு விண்ணப்பிக்கும் சேவை தொடங்கும் என்று பொது சேவை மைய நிர்வாகிகள் தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com