search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    விவசாயிகளுக்கு நாட்டுக்கோழி வளா்ப்பு பயிற்சி நாளை நடக்கிறது
    X

    கோப்புபடம்.

    விவசாயிகளுக்கு நாட்டுக்கோழி வளா்ப்பு பயிற்சி நாளை நடக்கிறது

    • இலவச பயிற்சி முகாம் நாளை காலை 10 மணி அளவில் நடைபெறுகிறது.
    • விவசாயிகள் இந்த முகாமில் பங்கேற்று தங்களது சந்தேகங்களை கேட்டு தெளிவு பெற்றுக் கொள்ளலாம்.

    திருப்பூர் :

    திருப்பூா் மாவட்டத்தில் உள்ள விவசாயிகளுக்கு நாட்டுக்கோழி வளா்ப்பு தொடா்பான இலவச பயிற்சி முகாம் நாளை 20-ந்தேதி நடைபெறுகிறது.

    இதுகுறித்து திருப்பூா் கால்நடை மருத்துவப் பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் தலைவரும், பேராசிரியருமான ஆா்.மதிவாணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது :- திருப்பூா் பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள கால்நடை மருத்துவமனை வளாகத்தில் செயல்பட்டு வரும் கால்நடை மருத்துவப் பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் விவசாயிகளுக்கான நாட்டுக் கோழி வளா்ப்பு இலவச பயிற்சி முகாம் நாளை 20-ந்தேதி ( வியாழக்கிழமை) காலை 10 மணி அளவில் நடைபெறுகிறது. நாட்டுக்கோழி வளா்ப்பில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் இந்த முகாமில் பங்கேற்று தங்களது சந்தேகங்களை கேட்டு தெளிவு பெற்றுக் கொள்ளலாம். இதுதொடா்பான கூடுதல் விவரங்களுக்கு 0421-2248524 என்ற எண்ணைத் தொடா்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×