search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    புலிகளை காக்க விழிப்புணர்வு ஏற்படுத்திய கல்லூரி மாணவர்கள்
    X

    விழிப்புணர்வு ஏற்படுத்திய கல்லூரி மாணவர்களை படத்தில் காணலாம். 

    புலிகளை காக்க விழிப்புணர்வு ஏற்படுத்திய கல்லூரி மாணவர்கள்

    • மனித சங்கிலி அமைத்தும் புலிப் போன்று வேடமிட்டும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
    • காடுகளில் மரங்களை வெட்டாமல் இருந்தாலே போதும் புலிகளை காப்பாற்றலாம்.

    திருப்பூர் :

    திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்டம் அலகு-2 சார்பாக இன்று கல்லூரி நுழைவாயிலில் உலக புலிகள் தினத்தை முன்னிட்டு மனித சங்கிலி அமைத்தும் புலிப் போன்று வேடமிட்டும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

    அலகு - 2 ஒருங்கிணைப்பாளர் மோகன்குமார் , தேசிய விலங்கான புலிகளின் முக்கியத்துவத்தை கூறி வரவேற்புரை வழங்கினார். சிறப்பு விருந்தினராக மதுவிலக்கு அமலாக்க பிரிவு ‌காவல் ஆய்வாளர் பிரகாஷ் மற்றும் வடக்கு காவல் ஆய்வாளர் உதயகுமார் ஆகியோர் கலந்து கொண்டு பேசுகையில் , மக்களிடம் புலிகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக இந்நாள் உலகம் முழுவதும் புலிகள் தினம் கொண்டாடப்படுகிறது .காடுகளின் காவலன் புலிகள் எனவும் , காடுகளில் மரங்களை வெட்டாமல் இருந்தாலே போதும் புலிகளை காப்பாற்றலாம். நாம் காடுகளை அழிப்பதன் மூலம் அதிக நகரங்களை உருவாக்குவதன் மூலம் வசிக்க இடம் இல்லாமல் உண்ண உணவு இல்லாமல் புலிகள் இறந்துவிடுகிறது .

    புலிகளின் எண்ணிக்கை முன்பு இருந்ததை விட இப்போது மிகவும் குறைவாக உள்ளது . இந்தியாவில் உள்ள 51 புலிகள் காப்பகங்களில், களக்காடு முண்டந்துறை, ஆனைமலை, முதுமலை மற்றும் சத்தியமங்கலம் ஆகிய 4 புலிகள் காப்பகங்கள் தமிழகத்தில் உள்ளன. புலிகளின் கண்கள் இரவில் மனிதர்களை விட ஆறு மடங்கு தெளிவாக தெரியும் என்றார்.

    நிகழ்ச்சியில் மாணவ செயலர்கள் அருள்குமார் , பாலசுப்பிரமணியம் , சுந்தரம் , பூபதி ராஜா ஆகியோர் தலைமையில் ஏராளமான கல்லூரி மாணவ மாணவிகள் கலந்து கொண்டு புலி போன்று வேடமிட்டும் , பதாகைகளை ஏந்திக்கொண்டும் , புலிகளின் முககவசங்களை அணிந்தும், கைக்கட்டை விரல்களில் புலியின் நிறத்தை வரைந்தும் உலக புலிகள் தின விழிப்புணர்வு கொண்டாடப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை கல்லூரி முதல்வர் கிருஷ்ணன் செய்திருந்தார்.

    Next Story
    ×