search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சிகரெட் பற்ற வைத்தபோது தீப்பிடித்து வாலிபர் பலி
    X

    சிகரெட் பற்ற வைத்தபோது தீப்பிடித்து வாலிபர் பலி

    • திருமணமான ஒரு வருடத்தில் சோகம்.
    • தீ மளமளவென உடல் முழுவதும் பரவியது.

    கோவை:

    கோவை கருமத்தம்பட்டி உஜபாளையம் பகுதியை சேர்ந்தவர் ரஞ்சித் (வயது 24). கூலி தொழிலாளி. இவரது மனைவி சங்கிதா (24). இவர்களுக்கு கடந்த ஒரு வருடத்துக்கு முன்பு திருமணம் நடந்தது. இந்த நிலையில் ரஞ்சித்துக்கு குடிப்பழக்கம் உள்ளது.

    சம்பவத்தன்று ரஞ்சித் குடிபோதையில் வீட்டுக்கு வந்தார். அப்போது அவர் சிகிரெட்டை பற்ற வைத்தார். இதில் எதிர்பாராத விதமாக தீ அவரது உடையில் பற்றியது. தீ மளமளவென அவர் உடல் முழுவதும் பரவியது. வலி தாங்க முடியாமல் அவர் சத்தம் போட்டார். அவரின் சத்தத்தை கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர்.

    அவர்கள் தீயை அனைத்து ரஞ்சித்தை மீட்டனர். பின்னர் அவரை கோவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர். ஆனால் அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து கருமத்தம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணமான ஒரு வருடத்தில் வாலிபர் இறந்த சம்பவம் அந்த பகுதயில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×