search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ராகுல்காந்தி நடைபயணத்தில் 1000 பேர் பங்கேற்க கூட்டத்தில் தீர்மானம்
    X

    கூட்டத்தில் தஞ்சை தெற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் து.கிருஷ்ணசாமி வாண்டையார் பேசினார்.

    ராகுல்காந்தி நடைபயணத்தில் 1000 பேர் பங்கேற்க கூட்டத்தில் தீர்மானம்

    • ராகுல் காந்தி தலைவர் பதவியை தட்டிக்கழிக்காமல் ஏற்று கொள்ள வேண்டும் என்று தீர்மானம் இயற்றப்பட்டது.
    • பாராளுமன்ற தேர்தலில் எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைத்து ராகுல்காந்தி இந்தியாவின் பிரதமராக வர கடுமையாக உழைக்க வேண்டும்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை ெதற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் டாக்டர் து.கிருஷ்ணசாமி வாண்டையார்தலைமையில் தஞ்சை தெற்கு மாவட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. தஞ்சாவூர் வட்டாரத்தலைவர் ரவிச்சந்திரன் அனைவரையும் வரவேற்றார்.

    மாவட்ட துணைத்தலைவர்கள் வக்கீல் கோ.அன்பரசன், பட்டுக்கோட்டை வக்கீல் ராமசாமி, அகில இந்திய காங்கிரஸ் உறுப்பினர் குணா பரமேஸ்வரி, முன்னாள் மாநில துணைத்தலைவர் பட்டுக்கோட்டை கலைச்செல்வன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இந்த கூட்டத்தில்,அகில இந்திய காங்கிரஸ் துணைத்தவைர் ராகுல்காந்தி தலைமையில் அடுத்த மாதம் 7-ந் தேதி கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை தொடங்க உள்ள நடைபயண ஆரம்ப விழாவில் தஞ்சை மாவட்டத்தில் இருந்து 1000 பேர் கலந்து கொள்ள வேண்டும்.

    நடைபயணத்தில் ராகுல் காந்தியுடன் 50 பேர்செல்ல வேண்டும்.

    செப்டம்பர் மாதம் நடைபெற உள்ள அகில இந்திய காங்கிரஸ் தலைவர்தேர்தலில் ராகுல் காந்தி தலைவர் பதவியை தட்டிக்கழிக்காமல் ஏற்று கொள்ள வேண்டும் என்று தீர்மானம் இயற்றப்பட்டது.

    2024- –ல் நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலில் எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைத்து ராகுல்காந்தி இந்தியாவின் பிரதமராக வர கடுமையாக உழைக்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    பல ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டுள்ள தஞ்சாவூர் -பட்டுக்கோட்டை, தஞ்சாவூர் - அரியலூர், மன்னார்குடி- பட்டுக்கோட்டை, கும்பகோணம் -விருத்தாச்சலம் ரயில்பாதை திட்டத்திற்கு அதிக அளவு பணம் ஒதுக்கி மேற்படி திட்டத்தை விரைந்து செயல்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும்.

    தஞ்சாவூரிலிருந்து பெங்களுருக்கு புதிதாக விரைவு ரயில் ஒன்றை இயக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும்.

    தஞ்சை மாவட்டம் செங்கிப்பட்டியில் புதிதாக எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    இதில் மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் சத்தியமூர்த்தி, மாநகர மாவட்ட கோட்ட தலைவர் கதர்.வெங்கடேசன், வட்டாரத்தலைவர்கள் நாராயணசாமி, சேக்இப்ராகிம்ஷா, அய்யப்பன், பாண்டிதுரை, சித்திரக்குடி ஆண்டவர், கனகராஜ், அதிராம்பட்டிணம்நகர தலைவர் தமிழ் அன்சாரி, சோழமண்டல சிவாஜி பாசறை தலைவர்சதா.

    வெங்கட்ராமன், வழக்கறிஞர் மைனர், சோழபுரம் ராஜேந்திரன், இளைஞர்காங்கிரஸ் நிர்வாகிகள் ரமேஷ் சிங்கம், கீர்த்திவாசன், ராஜ்குமார், காங்கிரஸ் நிர்வாகிகள் சண்முகம், முகிலன், சுப்புராமன், சாமி மனோகரன், ஜான் தனசேகர், மாரிமுத்து, வீராசாமி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×